Feed

ஹேட்லி குறித்த தகவல்: இந்தியாவுக்கு ஏமாற்றம்


புதுதில்லி, அக்.28- இந்திய நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள டேவிட் ஹேட்லி குறித்த தகவல்களை பெறுவதில் இந்தியாவுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளை கூறியுள்ளார்.

எனினும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் டிமோதி ஜெ ரோமர், "மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு முந்தைய காலத்தில் இருந்தே தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பாக இந்தியாவுக்கு தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் தகவல்களை அளித்து வந்தோம். மும்பை தாக்குதலுக்கு பின்னரும் தொடர்ந்து தகவல்களை வழங்கி வருகிறோம்." என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், ஹேட்லி தொடர்பாக பயனுள்ள தகவல்களை பெறுவதில் இந்திய புலனாய்வு ஏஜென்சிகளுக்கு ஏமாற்றம்தான் ஏற்பட்டுள்ளது என்று ஜி.கே. பிள்ளை கூறியுள்ளார்.

Copyright © 2009 News and Entertainment All rights reserved.