Feed

'எந்திரன் கதை என்னுடையது': தமிழ் எழுத்தாளர் போலீசில் புகார்



சென்னை, அக்.26: 1996-ம் ஆண்டு தான் எழுதிய சிறுகதையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைக்கதையை உருவாக்கியுள்ளனர் என எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் சென்னை போலீசில் புகார் செய்துள்ளார்.

ஆரூர் தமிழ்நாடன் என்கிற அமுதா தமிழ்நாடன் தனது வழக்கறிஞர்களுடன் வந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இதுதொடர்பாக புகார் செய்தார்.

1996-ல் ஜூஹிபா என்ற பெயரில் தான் எழுதிய சிறுகதை ஒரு இதழில் வெளியானது. அந்த சிறுகதையில் இருந்து எந்திரன் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடன் அதில் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்ததாக தமிழ்நாடன் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Copyright © 2009 News and Entertainment All rights reserved.