Feed

Showing posts with label Religion. Show all posts
Showing posts with label Religion. Show all posts

இந்திய ஹஜ் பயணிகள் 29 பேர் மரணம்

 சவுதி அரேபியாவில் முஸ்லிம்களின் புனித நகரமான மெக்காவுக்கு ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் இருந்து ஹஜ் பயணிகள் புனித யாத்திரை மேற்கொள்வார்கள்.

இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான ஹஜ் பயணிகள் மெக்காவிற்கு சென்று உள்ளனர்.

இவர்களில் 29 பேர் நோய் காரணமாக மரணம் அடைந்தனர். உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து சென்ற 8 பேர், பீகார் மாநிலத்தில் இருந்து 6 பேர்,

கேரள மாநிலத்தில் இருந்து 4 பேர், மேற்கு வங்காளத்தில் இருந்து 3 பேர், அசாம் மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் இருந்து தலா 2 பேர், ராஜஸ்தான், குஜராத், மராட்டிய மாநிலத்தில் இருந்து ஒருவர் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து சென்ற பயணி ஒருவரும் பலியாகி உள்ளனர்.

இந்துக்களை ஆர்.எஸ்.எஸ். ஏமாற்றிவிட்டது: இந்து மகாசபா குற்றசாற்று

இந்துக்களை ஆர்.எஸ்.எஸ். ஏமாற்றிவிட்டதாக இந்து மகாசபா குற்றம்சாற்றியுள்ளது.
J B Kshatriya
ஜலந்தரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்த இந்து மகாசபாவின் பேச்சாளர் ஜே.பி. ஷைத்ரியா, செல்வத்தை குவித்துக்கொள்வதற்காகவே அயோத்தியில் ராமர் கோவில் இடத்தை கைப்பற்ற ஆர்.எஸ்.எஸ். எண்ணுவதாக குற்றம்சாற்றினார்.

இந்துக்கள் தற்போது சந்தித்து வரும் பிரச்சனைகள், ஆர்.எஸ்.எஸ். ஆல் உருவாக்கப்பட்டதுதான் என்றும் குற்றம் சாற்றிய அவர், தொடக்கம் முதலே இந்துக்களின் நலம் விரும்பியாக ஆர்.எஸ்.எஸ் நடித்து மட்டுமே வந்ததாகவும், இந்துக்களுக்கு நியாயமாக அது நடந்துகொள்ளவில்லை என்றும், அவர்களை ஏமாற்றிவிட்டதாகவும் கூறினார்.

அயோத்தி : இராமர் பிறந்த பூமியா? சீதை ம‌ரித்த பூமியா?

உத்தரபிரதேச மாநிலம் ஃபைசாபாத் மாவட்டத்திலுள்ள அயோத்தியில், சங் பரிவார் அமைப்புகளால் இடித்துத் தள்ளப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கையை ஏற்றுக் கொண்டு, பாபர் மசூதி - இராமர் ஜென்ம பூமி வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்ட நிலையில், அங்கு இராமர் பிறந்திருக்க முடியுமா? அல்லது அங்கு இராமருக்கு கோயில் இருந்திருக்க முடியுமா? என்பது குறித்து ரகு வம்சத்தை எடுத்துக் காட்டி ஒரு எதிர் விளக்கத்தை தருகிறார் சத்தியமங்கலம் என். நாகராஜன்.
திரு. எஸ்.என், நாகராஜன்
84 வயதாகும் திரு. எஸ்.என், நாகராஜன் பொதுவுடைமை இயக்கதில் நீண்ட காலம் பணியாற்றியவர். கீழை மார்க்சிய சிந்தையாளர். அதுமட்டுமின்றி, ஆழ்வார்களின் தென் கலை வைணவப் பின்னணியும், அதில் மிகுந்த ஈடுபாடும் கொண்டவர். இன்றைக்கு விவசாயத்தையும், சுற்றுச் சூழலையும் காப்பாற்ற தொடர்ந்து பணியாற்றி வருபவர். நமது நாட்டின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் அறிந்த ஒரு சீரிய சிந்தனையாளர்.

இவர் அயோத்தியில் இராமர் பிறந்திருக்க முடியாது என்று வாதிடுகிறார். அவருடைய வாதம் வருமாறு:

“அயோத்தி அரசன் தசரதனின் மனைவியான கோசலை, குசால இராஜ்யத்தின் இளவரசியாவார். இவரை தசரதன் கடத்திச் சென்றோ அல்லது கடி மனமோ (காந்தர்வ விவாஹம்) புரியவில்லை, முறைப்படியே மணம் புரிந்துள்ளார். எனவே, தொன்று தொட்டு இந்நாட்டில் நிலவிவரும் மரபுப் படி, நிறைமாத கர்பினியான ஒரு பெண், தனது தாய் வீட்டிற்குச் சென்று பிள்ளை பெறுவதைப்போல, தசரதனின் மனைவியான கோசலையும் தனது தாய் வீடான (இராஜ்யமான) குசால மன்னன் அரண்மனைக்குச் சென்று அங்குதான் இராமனை பிரசவித்திருக்க முடியும்.

எனவே, அயோத்தியில்தான் இராமன் பிறந்தார் என்பதற்கு அடிப்படையேதுமில்லை. எந்தப் புராணத்திலும் அதற்கான ஆதாரமும் இல்லை.

இரண்டாவதாக, அயோத்தி புண்ணிய பூமியா? என்ற கேள்வியும் உள்ளது. இராவணனின் பிடியில் இருந்து சீதையை காப்பாற்றி வந்த இராமன், அவளுடைய கற்பின் தூய்மையை நிரூபிக்க அக்னி பிரவேசம் செய்ய முற்பட்டபோது, இராமன் தடுக்கவில்லை. சீதை அக்னி பிரவேசத்தை நிறைவேற்றிய இடம் அயோத்தியாகும். இந்த விவரம் வால்மீகி இராமயணத்தில் உள்ளது. அக்னிப் பிரவேசத்தின் போது சீதையை அவளுடைய தாயான பூமிதேவி தன்னுள் எடுத்துக் கொண்டாள் என்று அனைத்துப் புராணங்களும் கூறுகின்றன.

இதில் குறிப்பிடத்தக்கது ரகு வம்சம். காளிதாசர் எழுதிய ரகு வம்சத்தில் அயோத்தி ஒரு புனித தலமாக சித்தரிக்கப்படவில்லை. அதை சீதை மறித்த பூமியாகவே காட்டுகிறார் காளிதாசர். ரகு வம்சத்தில் உத்தர காண்டம் மிக முக்கியமானது. அதில் இந்த விவரம் உள்ளது.

தனது மனைவி சீதை மீது இராமன் சந்தேகம் கொண்ட நிலையிலேயே, சீதையை தனது ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்கிறார் வால்மீகி. இராமனின் பிள்ளைகளான லவ, குசா இருவரும் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில்தான் பிறந்தனர். அங்குதான் வளர்ந்தும் வந்தனர். அவர்கள் 6 வயதைக் கடந்த நிலையில் அவர்களை இலக்குவன் அயோத்திக்கு அழைத்து வருகிறார். அப்போது வால்மீகியும் உடன் வருகிறார்.

அப்போது லவ, குசா இருவரும் யாருக்குப் பிறந்தவர்களோ என்ற சந்தேகத்தை ஒருவன் எழுப்ப (வண்ணான் என்று கூறுகின்றனர்), சீதை அக்னி பிரவேசம் செய்ய முற்படுகிறார். அதை இராமன் தடுக்கவில்லை. சீதை அக்னி பிரவேசம் செய்த நிலையில், அவளுடைய தாயான பூமிதேவி சீதையை தன்னோடு அழைத்துக் கொண்டு பூமிக்குள் சென்று விடுகிறாள்.

தங்களது தாய் மறித்த இடத்தில் நாங்கள் வாழ் மாட்டோம் என்று கூறிவிட்டு, லவ, குசா இருவரும் அயோத்தியை விட்டு வெளியேறுகின்றனர். அவர்களோடு அயோத்தி மக்களும் வெளியேறி விடுகின்றனர். அத்துடன் அயோத்தியே காலியாகிவிடுகிறது.

ஆர்.எஸ்.எஸ்.சை கண்காணிக்க வேண்டும்: காங்கிரஸ்





 ஆஜ்மீர் குண்டுவெடிப்பு விசாரணையில் ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு காவ‌ல்துறை கண்டுபிடித்த தகவல்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

ஆஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடைசெய்ய பொருத்தமானது என காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் மணீஷ் திவாரி தெரிவித்தார்.

எனினும் ஆர்எஸ்எஸ் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது அவசியம் அல்லது அவசியமில்லை என்பதை அரசுதான் தீர்மானிக்க வேண்டும் எ‌ன்று ‌திவா‌ரி கூ‌றினா‌ர்.

பிரிட்டிஷ் முன்னால் பிரதமர் டோனி ப்ளேய்ரின் மனைவியின் சகோதரி இஸ்லாத்தை தழுவினார்!

பலஸ்தீன விடுதலைக்கு குரல் கொடுக்கும்  மேற்கு உலக பெண்களில் மிகவும் பிரபல்யமானவர்களின் ஒருவரான Lauren Booth இஸ்லாத்தை ஏற்றுகொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

இவர் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமரான டோனி பிளயர் மனைவியின் சகோதரியாவார், இவர்  பலஸ்தீன் காஸா மீதான இஸ்ரேல்  ஆக்கிரமிப்பு முற்றுகைக்கு எதிராக  பலமாக குரல் கொடுத்து வருபவர் என்பது குறிபிடத்தக்கது  லண்டனில் நடைபெற்றுள்ள நிகழ்வொன்றில் கலந்து கொண்டு தான் ஒரு முஸ்லிம் என்று தெரிவித்துள்ளார் இவரின் அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Copyright © 2009 News and Entertainment All rights reserved.