Feed

அமெரிக்கா தாக்கப்படும்! இஸ்ரேல் உளவாளி பரபரப்பு தகவல் - டிச. 28-2009

 27-10-2010_ல் தற்போது நடந்த அமெரிக்காவுக்கான விமானத்தில் வெடிப்பொருட்கள் இருந்ததை 

கடந்த 28-12-2009_ல் சொன்ன இஸ்ரேலின் உளவாளியின் பரபரப்பு தகவல்


டெல் அவிவ், டிச. 28-2009 ஜுவல் அவிவ் இஸ்ரேல் பிரதமர் கோல்டா மெய்ராவின் மெய்க்காப் பாளராக இருந்தவர்.

முனிச்சில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற சமயம் பாலஸ்தீன பிணைக் கைதிகளால் இஸ்ரேலிய தடகள வீரர்கள் கொல்லப்பட்டனர்.அந்த சம்பவத்தை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக கோல்டா மெய்ராவால் நியமிக்கப் பட்டவர். தடகள வீரர் களின் படுகொலைக்கு சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனையையும் வாங்கித் தந்தவர். இந்தப் படுகொலைக்கான கண்டனத்தையும், விசாரணையையும் இஸ்ரேல் தன் நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொண்டது.

ஜுவல் அவிவ் லண்டன் ரயில்வே சுரங்கப்பாதை வெடி குண்டு சம்பவத்தை முன் கூட்டியே கணித்தார். லண்டன் மாநகர போலீசார் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தி ருந்தபோதும் லண்டன் சுரங்க வெடிகுண்டு சம்பவம் நடந்தது. ஜுவல் அவிவ் முன்னரே கண்டுபிடித்து கூறியபோது கேலியும், கிண்டலும் செய்யதார்களாம்.

ஜுவல், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளிலிருந்து இரட்டை கோபுரம் தாக்கப்படலாம் என்ற செய்தியை அமெரிக்க (புஷ்) அராசங்கத்திடம் கொடுத்தார்.ஆனால் இந்தக் கணிப்பையொட்டி அமெரிக்க அரசாங்கம் பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை செய்யவில்லை. 
இதன் விளைவாக இரட்டை கோபுரம் ஒரு மாதத்திற்கு பிறகு தகர்க்கப்பட்டது.ஜுவல் தனது அறிக்கையில் தீவிரவாதிகள் விமானம் அல்லது குண்டுகளின் உதவியுடன் அமெரிக்காவின் அதிக முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களையோ அல்லது நினைவுச் சின்னங்களையோ தாக்கலாம் என விவரமாக கூறியுள்ளார். அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்ட மாதிரியாகவே இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது. இந்த சம்பவம் நடைபெற்றதிலிருந்து தனது நாட்டு பாதுகாப்புக்காக ஓரு தொகையை வாடகையாக பாதுகாப்பு ஆலோசனை நிறுவனத்திற்கு அமெரிக்கா வழங்கி வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் மீது தீவிரவாதிகளால் மற்றுமொரு தாக்குதல் அடுத்த சில மாதங்களில் நடத்த வாய்ப்பு இருப்பதாக ஜுவல் அவிவ் கூறியுள்ளார்.2001 விமான கடத்தலையே மக்கள் மறக்க முடியாத நிலையில், தீவிரவாதிகள் மீண்டும் ஒரு விமான கடத்தலை நடத்த நினைக்கமாட்டார்கள். 

அதாவது வெடிகுண்டுகளில் உலோகம் இருக்கும் என நம்புகிறோம். ஆனால் தீவிரவாதிகள் அதிக திறன் வாய்ந்த பிளாஸ்டிக் தொழில் நுட்பத்துடன் கூடிய வெடிகுண்டுகளை பயன்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Proof Here http://pledgeamerica.org/blog/2009/10/juval-avivisraeli-agent-speaks-out
 அமெரிக்கா தாக்கப்படும்! இஸ்ரேல் உளவாளி பரபரப்பு தகவல்

Comments : ஆஹா எவ்வளவு அருமையாக பாம் வைக்கிறத முன்னாடியே சொல்லிருக்காங்க... Sorry, Sorry எவ்வளவு அருமையாக யாரோ பாம் வைக்கப்பொறத முன்னாடியே சொல்லிருக்காங்க... Realy Great yaa

அமெரிக்காவுக்கான விமானத்தில் வெடிப்பொருட்கள்


அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட பார்சல் ஒன்றை துபாயில் வழிமறித்து சோதித்ததில் அதில் வெடிப்பொருட்கள் இருந்ததாகவும், இதில் அல் கையிதா ஈடுப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் தெரிவதாக துபாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதே போன்று பிரிட்டனின் ஈஸ்ட் மிட்லேண்ட்ஸ் விமான நிலையத்திலும் பார்சல் ஒன்று வெடிப்பொருட்களுடன் பிடிக்கப்பட்டுள்ளது.

துபாயில் பிடிக்கப்பட்டுள்ள பார்சலில் பி.ஈ.டீ.என் என்ற வெடிமருந்து இருந்துள்ளது. இதே வெடிமருந்து தான் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டெட்ராய்ட்க்கு சென்ற விமானம் ஒன்றில் வெடிக்க வைக்க முயற்சிக்கப்பட்டது. 

வெள்ளிகிழமையன்று துபாய் மற்றும் பிரிட்டனில் பிடிக்கப்பட்ட இரு பார்சல்களுமே யெமனில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற சரக்கு விமானத்தில் இருந்தன. இந்த பொருட்களுக்கும் அரேபிய பகுதியில் இயங்கி வரும் அல் கையிதாவுக்கும் தொடர்பு இருக்கும் என புலனாய்வு அதிகாரிகள் எண்ணுகின்றனர். 


இந்த இரு பார்சல்களுமே சிகாகோ பகுதியில் இருக்கும் யூதர்களின் வழிப்பாட்டு மையங்களுக்கு முகவரியிட்டு அனுப்பப்பட்டுள்ளன.

யூ.பி.எஸ். பெடெக்ஸ் சரக்கு விமானங்களில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பார்சல்களை தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விமான நிலையங்களில் யெமனில் இருந்து வரும் பொருட்களை சோதித்து வருகின்றனர். 

இதற்கிடையே பிரிட்டனில் பிடிப்பட்ட பொருள் தொடர்பாக கருத்து தெரிவித்த பிரிட்டனின் உள்துறை செயலரான தெரஸா மே, இது வெடிக்க வைக்க கூடிய உபகரணம் தானா என்று நிபுணர்கள் ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார். 

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தாங்கள் பல்வேறு தகவல்களை ஆராய்ந்து வருவதாகவும், யெமனில் இருந்து தான் பார்சல்கள் வந்துள்ளது என்பது தங்களுக்கு தெரியும் என்றார். அதே போன்று அரபிய தீபகற்ப பகுதியில் இயங்கி வரும் அல் கையிதா, எம்முடைய நாட்டில், எம்முடைய குடிமக்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடுவது தங்களுக்கு தெரியும் என்றும் கூறினார். 

இந்த பார்சல்கள் பிடிப்பட்டதற்கு சவுதி அரேபியா கொடுத்த தகவலே காரணம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. பிரிட்டனின் ‘டெய்லி டெலிகிராப்’ செய்தித்தாள் வெளியிட்டுள்ள செய்தியில் யெமனுக்கு பொறுப்பான எம்.ஐ.6 அதிகாரிக்கு இந்த பார்சல்கள் குறித்த தகவல்கள் வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, யெமன் அதிகாரிகள் இருபதுக்கும் அதிகமான சந்தேகத்துக்கு இடமான பார்சல்களை பறிமுதல் செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். 

யெமனில் இருந்து அனுப்பப்படும் ஆட்கள் கூட வராத பார்சல்களை தனது வான்வெளியில் அனுமதிக்க போவதில்லை என பிரிட்டன் அறிவித்துள்ளது.

அமெரிக்க விமானத்தில் குண்டுகள் கண்டுபிடிப்பு

ஏமனிலிருந்து அமெரிக்கா செல்ல இருந்த விமானத்தில் வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

ஏமன் நாட்டில் இருந்து புறப்பட்டு பிரிட்டனில் தரையிறங்கி, பின்னர் அமெரிக்காவின் சிக்காகோ நகருக்குச் செல்லவிருந்த விமானத்தில், தொலைதூரத்தில் இருந்து இயக்கவல்ல குண்டு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அமெரிக்காவின் பிரபலமான, மற்றும் சர்வதேச அளவில் சேவையாற்றும் யு.பி.எஸ் பார்சல் சர்வீஸ் விமானத்திலேயே இக்குண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பிரிட்டனின் மிட்லன்ஸ் பகுதியில் தரையிறங்கிய விமானத்தில், இக்குண்டுகள் இருப்பதைக் கண்டறிந்த அதிகாரிகள், உடனே குண்டைச் செயலிழக்கச் செய்யும் நிபுணர்களை வரவழைத்து அக்குண்டுகளை செயலிழக்கச் செய்தனர்.

இதுபோன்ற மற்றுமொரு குண்டு துபாயில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
துபாயில் பிடிப்பட்ட பார்சல்
பிரிட்டன் வந்த அமெரிக்க விமானத்தை, பாதுகாப்புப் பிரிவினர் வழக்கம்போலச் சோதனை செய்ததபோது தற்செயலாக இது கண்டுபிடிக்கப்பட்டது.

வேலைக்கு அழைக்கும் மோசடி இ மெயில்கள்!

விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் எந்த அளவிற்கு வளர்கிறதோ அதற்கேற்ப மோசடி செய்பவர்களும் தங்களது மோசடி முறைகளை மாற்றிக்கொள்கிறார்கள்.

அந்த வகையான மோசடிகளில் ஒன்றுதான் வேலை தருவதாக கூறி வரும் மோசடி இ மெயில்கள்.

வங்கியிலிருந்து கேட்பதாக கூறி வங்கி கணக்கு எண் மற்றும் ரகசிய எண்ணை கேட்பது, "உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது; அதனை அனுப்பி வைப்பதற்கான கூரியர் செலவு மற்றும் டாக்குமெண்ட் கட்டணமாக இவ்வளவு தொகையை கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் செலுத்துங்கள்..." என்பதுமாதிரியான மெயில்களை அனுப்பிக்கொண்டிருந்தவர்கள், அவை மோசடியானது என்பது தெரியவந்துவிட்டதால், தற்போது தங்களது யுக்தியை மாற்றிக்கொண்டு, வேலை தேடுபவர்களை குறிவைக்கிறார்கள்.

இதுநாள் வரை பேருந்துகளிலும், ரயில்களிலும் பிட் நோட்டீஸ் அடித்து ஒட்டி, அதில் " பிரபல அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களுக்கு படித்த மற்றும் படிக்காத ஆட்கள் தேவை. மாதச் சம்பளம் 10,000 முதல்..." என்று வாயை பிளக்க வைக்கும் தொகையை குறிப்பிட்டு, முகவரி எதையும் தெரிவிக்காமல், செல்போன் எண்ணை மட்டும் தெரிவித்திருப்பார்கள்.

அதைப்பார்த்து ஏமாந்து தொடர்புகொள்பவர்களிடம், ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி, 10,000 சம்பளத்திற்கு 10,000 டெபாசிட் கட்ட வேண்டும், 20,000 என்றால் அதற்கேற்ற தொகை என்று கூறி, லம்பாக ஒரு தொகையை கறந்துகொண்டு கம்பி நீட்டி விடுவார்கள்.

இத்தகைய நபர்கள்தான் இப்பொழுது புது அவதாரம் எடுத்து, தங்களது மோசடிகளை அரங்கேற்ற தொடங்கியுள்ளனர்.

ஏதோ ஒரு வகையில், எப்படியோ இ மெயில் முகவரிகளை திரட்டிக்கொள்ளும் இத்தகைய மோசடி பேர் வழிகள், பிரபலமான கம்பெனி பெயரில் , ஏகப்பட்ட பதவிகளின் பெயர்களை குறிப்பிட்டு, வேலைக்கு ஆட்கள் தேவை என்றும், உங்களுக்கு ஏற்ற வேலைக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதி சான்று, வேலை அனுபவம் முகவரி அத்தாட்சி, சம்பள பட்டியல் போன்றவற்றை அனுப்புங்கள் என்று கூறி ஒரு போலியான தனிநபர் மெயில் ஐடி கொடுத்திருப்பார்கள்.

கூடவே மிக முக்கியமாக, வேலைக்கான நேர்முக தேர்வுக்கு வருவதற்கு செக்யூரிட்டி டெபாசிட் தொகை கட்ட வேண்டும் என்று கூறி ஒரு தொகை குறிப்பிடப்பட்டிருக்கும். அத்துடன் அதை செலுத்துவதற்கான வங்கி கணக்கும் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதை உண்மையென நம்பி பணம் போட்டால் அவ்வளவுதான்.பணத்தை எடுத்துக்கொண்டு, அந்த வங்கிக்கணக்கையே "குளோஸ்" செய்துவிட்டு கம்பி நீட்டிவிடுவார்கள்.

பொதுவாகவே இத்தகைய மெயில்கள் மோசடியானவை என்பதை, அதில் காணப்படும் சில பொதுவான ஏமாற்று வேலைகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

முதலில் பிரபல கம்பெனி என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக, குறிப்பிட்ட பிரபல நிறுவனத்தின் பெயரோடு துணை வார்த்தைகளையும் சேர்த்திருப்பார்கள்.

கனவைப் பதியலாம்

மனித மூளை
கனவுகளை மின்னியல் ரீதியாக பதிவு செய்து அதற்கு கற்பிதம் கூற தாம் திட்டமிடுவதாக ஒரு அமெரிக்க ஆய்வாளர் கூறியுள்ளார்.
கனவுகள் ஏன் ஏற்படுகின்றன எப்படி ஏற்படுகின்றன என்பதைக் கண்டறியப் பயன்படக் கூடிய மூளையின் உயர் மட்ட செயற்பாடுகளை பதிவு செய்வதற்கான முறைமை ஒன்றை தாம் கண்டுபிடித்துள்ளதாக Journal Nature scientists என்னும் சஞ்சிகையில் வெளியான கட்டுரையில் அவர் தெரிவித்துள்ளார். 

கனவுகளை பதிவு செய்யக் கூடிய ஒரு இயந்திரத்தை உருவாக்குவதற்கான நோக்கம் என்பது ஒரு அலாதியான விசயந்தான். ஆனால், கலிபோர்னியாவில் உள்ள ஆய்வாளர் குழு ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவுக்காவது அது எவ்வாறு சாத்தியம் என்பது குறித்து விளக்குகிறது.


ஒருவரது முளையின் கலங்கள் அல்லது நியூரோன்கள் ஒரு விடயத்துடன் அல்லது ஒரு கருத்தியலுடன் தொடர்புபட்டதாக இருப்பதாக அந்த ஆய்வாளர்களின் ஒரு ஆய்வு கூறுகிறது.

உதாரணமாக பரிசோதனைக்கு உட்படும் ஒரு தொண்டர், நடிகை மர்லின் மன்றோவை நினைக்கும் போது அந்த நினைப்புடன் தொடர்புடைய அவருடைய மூளையில் இருக்கும் நியோரோன் பற்றிக்கொண்டு ஜொலிக்கும்.

பரிசோதனைக்கு வந்த தொண்டர்களுக்கு தொடர்ச்சியான பல படங்களை காண்பித்தபோது, பல தரப்பட்ட விடயங்கள், பொருட்கள் மற்றும் கருத்தியலுடன் சம்பந்தப்பட்ட நியூரோன்களை ஆய்வாளர்களால் அடையாளம் காண முடிந்தது.

தூங்கும் தொண்டர்களின் மூளையின் அலைகளை புரிந்துகொள்வதும், அதில் இருந்து அவர்கள் காணுகின்ற கனவுகளை புரிந்து கொள்ள விழைவது என்பவைதான் ஆய்வாளர்கள் எடுக்கப்போகின்ற அடுத்த முயற்சியாகும்.

ஆர்.எஸ்.எஸ்.சை கண்காணிக்க வேண்டும்: காங்கிரஸ்





 ஆஜ்மீர் குண்டுவெடிப்பு விசாரணையில் ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு காவ‌ல்துறை கண்டுபிடித்த தகவல்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

ஆஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடைசெய்ய பொருத்தமானது என காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் மணீஷ் திவாரி தெரிவித்தார்.

எனினும் ஆர்எஸ்எஸ் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது அவசியம் அல்லது அவசியமில்லை என்பதை அரசுதான் தீர்மானிக்க வேண்டும் எ‌ன்று ‌திவா‌ரி கூ‌றினா‌ர்.

10 ஆண்டுகளாக பட்டினிப் போராட்டம் நடத்தும் இரும்புப் பெண்மணி

மணிப்பூரைசசேர்ந்தவரஇரோமஷர்மிளஎன்பெண்மணி. ஆயுதப்படையினரசிறப்பஅதிகாரசசட்டத்தநீக்கக்கோரி 10 ஆண்டுகளாதனி நபராநின்றஉண்ணாநிலைபபோராட்டமநடத்தி வருகிறார்.

2000 ஆமஆண்டநவம்பர் 2ஆமதேதி மணிப்பூரமாநிலமமல்லோமஎன்இடத்திலஅஸாமதுப்பாக்கிபபடையினரநடத்திகாட்டுமிராண்டிததனமான 'என்கவுண்டரில்' ஒரநடுவயதபெண்மணி உட்பட 10 அப்பாவி மக்களசுட்டுககொல்லப்பட்டனர்.

அன்றைதினமஷர்மிலதனதஉண்ணாநிலைபபோராட்டத்தைததுவங்கினார், இரண்டநாட்களுக்குபபிறகஅவரதற்கொலமுயற்சி வழக்கிலகைதசெய்யப்பட்டார்.

ஆனாலஇவரஓராண்டசிறையிலவைக்கசசட்டமஉதவியது. ஓவ்வொரஆண்டமுடிவிலுமஇவரசிறையிலிருந்தவிடுவிக்கப்படுவார். ஆனாலஇவரவீட்டிற்குசசென்றஉற்றாரஉறவினர்களைபபார்ப்பதில்லை, ஆனாலதன்னுடைகோரிக்கையவலியுறுத்தி மீண்டுமபட்டினிப்போராட்டமசெய்வாரமீண்டுமகைதமீண்டுமபோராட்டமஎன்றஇவரதவாழ்வஇருந்தவந்துள்ளது,.

இவருக்காகவே.என். மருத்துவமனையிலஒரஅறசிறையாமாற்றப்பட்டுள்ளது . இந்தியாவில்தானஇவருக்ககைதவரவேற்பு. ஆனாலதெனகொரியஇவருக்கஅவர்களநாட்டினஉயர்ந்மனிஉரிமவிருதைககொடுத்தகவுரவித்தது. சமீபத்திலஇவருக்கரவீந்திரநாததாகூரவிருதும், ூ.51 லட்சமரொக்கமுமஅளிக்கப்பட்டது. ஆனாலஇவரபணத்திற்காபோராட்டமநடத்துமசாதாரநபரஅல்ல.. எவ்வளவபேரவலியுறுத்தியுமஇவரதனதபட்டினிபபோராட்டத்தைககைவிடுவதாயில்லை.

இவரதபோராட்எதிரொலியால் 2004ஆமஆண்டஆகஸ்ட் 12ஆமதேதி மணிப்பூரஅரசு 7 சட்டமன்றததொகுதிகளிலிருந்தஆயுதப்படசிறப்பஅதிகாரசசட்டத்தரத்தசெய்தது. ஆனாலஇதற்கெல்லாமஇவரமசியவில்லை. அதாவதஇந்அடாவடிசசட்டமமுற்றிலுமஒழிக்கப்படவேண்டுமஅதவரஎனபோராட்டமஓயாதஎன்றஇவரபட்டினிப்போராட்டத்தைததொடர்ந்தவருகிறார்.

ஆனாலஇந்தசசட்டத்தவாபஸபெற்றாலமீண்டுமபோராளிகளஅல்லதபிரிவினைவாதிகளஓங்குமஎன்றமறுத்தவருகிறது.

இவரபட்டினிப்போராட்டம் 10-வதஆண்டைததொட்டுவிட்டதால், ஜஸ்டபீஸஃபவுண்டேஷனஎன்அமைப்பஇவரகௌரவிக்முடிவசெய்துள்ளது.

நவம்பரமுதலவாரத்திலகாங்கிரஸதலைவரசோனியகாந்தி மணிப்பூரசெல்கிறார். அப்போதஇவரஷர்மிலாவைசசந்திக்முயற்சி செய்கிறாரஎன்பதைபபொறுத்திருந்தபார்ப்போம்.

அரசியல்வாதிகளின், போலிகளினபோலி உண்ணாநிலைபபோராட்டத்தைபபார்த்தபார்த்தமனமவெதும்புமஉண்மையாகுடிமகன்களுக்கஷர்மிலாவினபோராட்டமஒரதைரியத்தஅளிக்குமஎன்றநம்பலாம்.

ஒரமாநிலத்தினஅடக்குமுறையஎதிர்த்தஒரதனி நபரஅதுவுமஒரபெண்மணி ஒற்றையாளாநின்றஅறப்போராட்டமநடத்துவதகாந்தி தேசமாஇந்தியாவுக்கபெருமசேர்க்குமவிஷயமஎன்பதஒரபுறமிருக்க,

காந்தி எதிர்த்ததஅன்னிசக்திகளை, ஆனாலஇன்றஇந்இரும்புபபெண்மணி எதிர்ப்பதநமஉள்நாட்டஆதிக்கசசக்திகளஎன்பதநம்மசிந்திக்கததூண்டுமஒரவிஷயமாகபபார்க்அறிவுறுத்துகிறது.

இந்தோனேசியாவில் சுனாமிக்கு 110 பேர் பலி



ஜகார்த்தா: இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், கடலில் 10 அடி உயரத்துக்கு சுனாமி உருவானது. இதில் 110 பேர் பலியாயினர்; பெண்கள், குழந்தைகள் என 380 பேர் காணாமல் போய்விட்டனர். இந்தோனேசியாவின், மேற்கு பகுதியில், சுமத்ரா தீவின் அருகிலுள்ள மென்டாவாய் தீவுக்கருகில் நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், மேற்கு சுமத்ரா தீவிலுள்ள பல்வேறு மாகாணங்களில் உணரப்பட்டது.

நிலநடுக்கத்தால், கடலில் 10 அடி உயரத்துக்கு சிறிய அளவில் சுனாமி ஏற்பட்டது. மென்டாவாய் தீவுகளில் 20 கி.மீ., தூரத்துக்கு சுனாமியால் ஏற்பட்ட அலைகள் புகுந்தன. இந்தச் சுனாமியில் சிக்கி மென்டாவாய் தீவுகளில் 150 வீடுகள் சேதம் அடைந்தன. மென்டாவாய் தீவுகளில் தெற்கு பகாய் என்ற இடத்தில் உள்ள பெலு மொங்கா உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 380 பேர், வெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போய்விட்டனர். மலகோபா என்ற கிராமத்தில் 80 சதவீத வீடுகள் அழிந்து விட்டன. உணவுத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தீவுகளின் அருகில், படகில் சுற்றுலா மேற்கொண்டிருந்த 10 ஆஸ்திரேலியர்கள் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

பிரபாகரன் மீதான ராஜிவ் கொலை வழக்கு தள்ளுபடி

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்த புலித் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவு தலைவர் பொட்டுஅம்மான் ஆகியோரது மரணம் குறித்து இலங்கை அதிகாரிகள் அளித்த தகவல்களில் திருப்தியடைவதாக சி.பி.ஐ., தெரிவித்தது. இதையடுத்து, அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்து, வழக்கை கைவிடுவதாக, "தடா' சிறப்பு கோர்ட் அறிவித்துள்ளது. 
இந்திய சட்டப்படி, குற்றம் சாட்டப்பட்டவர் இறந்துவிட்டால், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தள்ளுபடி செய்யப்படும். அந்த அடிப்படையில், பிரபாகரன் மரணத்தை உறுதிப்படுத்தும் வகையில், அவரது மரணச் சான்றிதழை வழங்கும்படி, இலங்கை அரசை இந்தியா கேட்டுக்கொண்டது. ஆனால், அதுபோல எந்த சான்றிதழும் வழங்கப்பட்டதாக தகவல் இல்லை.


 "தடா' சிறப்பு நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி, "பிரபாகரனும், பொட்டு அம்மானும் இறந்துவிட்டதாக, புலன் விசாரணை ஏஜன்சியால் நிரூபிக்க இயலும் என இக்கோர்ட் நம்புகிறது. அதன் அடிப்படையில், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்து, வழக்கை கைவிட உத்தரவிடப்படுகிறது' என, உத்தரவிட்டுள்ளார். மேலும், தொடர்ந்து விசாரணை நடத்தி, விசாரணையின் முன்னேற்றம் குறித்து அடிக்கடி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மரணமடைந்து விட்டதாக, இந்திய அரசு முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

லேப்-டாப் திருடனை விரட்டி பிடித்த மாற்றுத் திறனாளி

மதுரையில் லேப்-டாப் திருடி, தலைமறைவானவரை நான்கு மாதங்களுக்குப் பின், விரட்டிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தார், மாற்றுத் திறனாளி கோபிகண்ணன்.


போலியோ பாதித்த மாற்றுத் திறனாளியான இவர், மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்தவர். மாநில, தேசிய, சர்வதேச அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்று 50க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றவர். இதற்காக, அரசு 2003ல் தொகுப்பூதியத்தில் பணி வழங்கியது. மதுரை கலெக்டர் அலுவலக பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஷாப்பிங் காம்பிளக்சில் பாதுகாப்பு பணியில் உள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன், இங்குள்ள கம்ப்யூட்டர் சென்டர் ஒன்றில் லேப்-டாப் திருடு போனது. அதை திருடியவரை கோபிகண்ணன் பிடிப்பதற்குள் தப்பி விட்டார்.

இந்நிலையில், நேற்று காலை அதே நபர் அங்கு நடமாடினார். ஏற்கனவே, தப்பிய நபரைப் போலவே இருந்ததால், அவரை விசாரித்தார் கோபி கண்ணன். அவர் முரணான பதில் கூறவே, அவரை மீண்டும் பிடிக்க முயன்றார். சுதாகரித்த அந்த நபர், அவரை தள்ளிவிட்டு ஓடினார்.இதை எதிர்பாராத கோபிகண்ணன், தனது டூவீலரில் மதிச்சியம் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று, இரு போலீசாரை அழைத்துக் கொண்டு திருடனை விரட்டினார். அந்த நபர் ஓட்டம் பிடிக்கவே, போலீசார் விரட்டிப் பிடித்தனர். விசாரணையில், அவர் அனுப்பானடியைச் சேர்ந்த சந்தனகுமார் (29) என தெரிந்தது. தல்லாகுளம் போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்

ஹேட்லி குறித்த தகவல்: இந்தியாவுக்கு ஏமாற்றம்


புதுதில்லி, அக்.28- இந்திய நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள டேவிட் ஹேட்லி குறித்த தகவல்களை பெறுவதில் இந்தியாவுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளை கூறியுள்ளார்.

எனினும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் டிமோதி ஜெ ரோமர், "மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு முந்தைய காலத்தில் இருந்தே தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பாக இந்தியாவுக்கு தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் தகவல்களை அளித்து வந்தோம். மும்பை தாக்குதலுக்கு பின்னரும் தொடர்ந்து தகவல்களை வழங்கி வருகிறோம்." என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், ஹேட்லி தொடர்பாக பயனுள்ள தகவல்களை பெறுவதில் இந்திய புலனாய்வு ஏஜென்சிகளுக்கு ஏமாற்றம்தான் ஏற்பட்டுள்ளது என்று ஜி.கே. பிள்ளை கூறியுள்ளார்.

இராக்கிய அதிகாரிகளின் சித்ரவதைகள்

விக்கிலீக்ஸ் இணையதளம் கிட்டதட்ட 4 லட்சம் அமெரிக்க இராணுவ ரகசிய பதிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த பதிவுகள் மூலம் இராக்கிய அதிகாரிகளின் சித்ரவதைகள் பற்றி தெரிந்து இருந்தும் அமெரிக்க இராணுவத்தினர் அதனை கண்டுகொள்ளவில்லை என அறிய வருகிறது. அத்தோடு அமெரிக்க இராணுவத்தின் சோதனை சாவடிகளில் பல நூற்றுக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பதிவுகள் கூறுகின்றன.
மேலும் பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்த ஆவணங்கள் கைவசம் இருந்தும், அவ்வாறு எவ்வித ஆவணமும் இல்லை என அமெரிக்கா முன்னர் மறுத்து வந்ததும் தெரிய வருகிறது. இராக் மீது போர் தொடுத்த பின்னர் பலியானவர்களின் எண்ணிக்கையானது 1,09,000 என்றும், அவற்றில் 66,081 பேர் பொதுமக்கள் என்றும் இப்போது அறிய வருகிறது. 

ஆனால் இந்த தகவலை எல்லாம் நிராகரித்துள்ள அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம், இதெல்லாம் மேலோட்டமான தகவல்கள் என கூறியுள்ளது. மேலும் சித்ரவதை மற்றும் முறைகேடான நடவடிக்கை இருந்தால், அவை குறித்து புகார் செய்தால் நடவடிக்கை எடுப்பதை தாங்கள் கோட்பாடாகவே வைத்திருப்பதாகவும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

லண்டனில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனரான ஜூலியன் அஸாங்கே, ஒவ்வொரு நாளும் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான இந்த பதிவுகள், இந்த போரால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை பிரதிபலிப்பாக கூறினார். மேலும் தினம் தினம் ஒன்று அல்லது இரண்டு பேர் கொல்லப்படும் சின்ன சின்ன சம்பவங்களின் ஒட்டு மொத்தமான எண்ணிக்கை தான் இது என்றும் கூறினார். 

இந்த பதிவுகள், தினந்தோறும் தொடர்ச்சியாக நடைபெற்று வரும், சின்ன தாக்குதல்கள் என்று வர்ணிக்கப்படும் சம்பவங்களால் ஏற்படும் பாதிப்புகளை காட்டுவதாக விக்கிலீக்ஸுடன் இணைந்து பணி புரியும் ‘இராக் பாடி கவுண்ட்’ அமைப்பின் ஜான் ஸ்லபோடா கூறினார்.
அமெரிக்கா விசனம்
ஹிலரி கிளிண்டன்
ஹிலரி கிளிண்டன்
முன்னதாக விக்கிலீக்ஸ் பதிவுகளை வெளியிடுவது தவறு என்று கூறியிருந்த அமெரிக்க ராஜாங்கத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன், இந்த தகவலால் பலருக்கு உயிராபத்து ஏற்படும் என கூறியிருந்தார்.

ஆனால் மிகவும் தணிக்கை செய்து வெளியிடப்பட்டுள்ள இந்த ஆவணத்தால் எந்த ஒரு ஆபத்தும் வரப்போவதில்லை என தெரிவித்துள்ள விக்கிலீக்ஸ், இந்த ஆவணங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலை கொண்டு சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க போவதாகவும் கூறியுள்ளது. 

வெளியிடப்பட்டுள்ள பதிவுகளில் ஒன்றில், டலஃபார் நகரத்தில் இராக்கிய இராணுவத்தினர் நபர் ஒருவரை கொன்றது தொடர்பான காட்சிநாடா அமெரிக்க இராணுவத்தினரிடம் கொடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுப்பட்டவர்களில் ஒருவரின் பெயர் கூட அமெரிக்க இராணுவத்தினரிடம் கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. 

மற்றுமொரு சம்பவத்தில் நபர் ஒருவரின் விரல்களை வெட்டி எடுத்த இராணுவத்தினர், அந்த நபரை பின்னர் அமிலத்தில் வீசி கொன்றுள்ளனர்.
இது போல இன்னும் ஏராளமான சித்ரவதை தொடர்பான பதிவுகள் வெளியாகியுள்ளன.

அதேபோன்று, அமெரிக்க படைகளால் வெளியில் இதற்கு முன்னர் சொல்லப்படாத ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவங்களும் இந்த பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

அணு இழப்பீடு சட்டம்: அமெரிக்கா அஞ்சுவது ஏன்?

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வருவதற்கு முன்னர், இந்தியாவின் நாடாளுமன்றம் நிறைவேற்றிய அணு விபத்து இழப்பீடு சட்டத்தில் தங்களுக்கு வசதியான மாற்றத்தைச் செய்துவிட வேண்டும் என்ற உறுதியுடன் இந்தியா வந்த அமெரிக்கக் குழு, அது அவ்வளவு சாதாரணமாக நடந்துவிடாது என்பதை அறிந்து ஏமாற்றமடைந்துள்ளது.

இந்தியாவின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையடுத்து ‘உரிய’ மாற்றங்களுக்குப் பின்னரே அணு விபத்து இழப்பீடு சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டது. பல நாட்கள் நடந்த தீவிரமான விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்ட்ட ஒரு சட்டத்தை, இந்திய அரசுடன் ஒரு ‘இணக்கமான பேச்சுவார்த்த’யின் மூலமதங்களுக்கு வசதியாக மாற்றிக் கொள்ளலாம் என்று நினைத்துவந்த அந்நாட்டின் அயலுறவு அமைச்சகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான கூடுதல் செயலர் வில்லியம் ஜே.பர்னஸ் தலைமையிலான குழு, அது நிறைவேறாது என்பதைப் புரிந்துகொண்டு, இந்தியா நிறைவேற்றியுள்ள அணு விபத்திற்கான கூடுதல் இழப்பு தொடர்பான பன்னாட்டு பிரகடனத்திற்கு உடன்பாடற்றது என்று கூறியுள்ளது.

பன்னாட்டு அணு சக்தி முகமையால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய அணு விபத்து தொடர்பான கூடுதல் இழப்பீடு பிரகடனம், அந்த பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ள நாடு ஒன்றில் அணு விபத்து ஏற்பட்டால், அதனால் பாதிக்கப்படும் அனைவருக்கும் கூடுதல் இழப்பீடு (அந்த நாட்டின் சட்டத்திற்குட்பட்டு அளிக்கப்படும் இழப்பீட்டையும் தாண்டி) அளிக்க இந்தப் பிரகடனம் வழி செய்கிறது. இதில் கையெழுத்திடத் தயார் என்று இந்தியா உறுதியளித்துள்ளது. அதில் இப்போதும் சிக்கல் ஏதுமில்லை என்று இந்திய அரசு கூறுகிறது.

ஆனால் சிக்கல் எங்கிருக்கிறது என்றால், அணு விபத்து ஏற்பட்டால் அந்த அணு உலையை விற்ற நிறுவனம் இழப்பீட்டிப் பொறுப்பிற்கு உடபடுத்தும் இந்திய அணு விபத்து இழப்பீடு சட்டத்தின் 17(பி) பிரிவே. இந்தப் பிரிவை நீக்க வேண்டும் என்று அமெரிக்கா வற்புறுத்துகிறது. அதாவது அணு விபத்து இழப்பீட்டில் அமெரிக்க நிறுவனங்களை பொறுப்பாக்காதே என்கிறது!

அதனால்தான் அணு விபத்து இழப்பீடு வழங்குவதற்கு பன்னாட்டு கூடுதல் இழப்பீடு பிரகடனத்தைப் பற்றிப் பேசுகிறது. அது கூடுதல் இழப்பீடு தொடர்பானது மட்டுமே, அணு விபத்து ஏற்பட்டால், அந்த அணு உலையை தயாரித்து விற்ற நிறுவனத்தின் பொறுப்பென்ன? அதுதான் இந்திய அரசு கேட்கும் கேள்வி. அந்தப் பொறுப்பில் இருந்து தயாரிப்பாளர் என்ற முறையில் அணு உலையை விற்ற நிறுவனம் தனது இழப்பீடு பொறுப்பை தட்டிக் கழித்துவிட்டு வெளியேறிவிட முடியாது. இதுதான் அமெரிக்காவிற்கு, அதாவது அதன் அணு உலை தயாரிப்பு நிறுவனங்களுக்கு கசக்கிறது.

அமெரிக்காவின் முன்னணி அணு உலை தயாரிப்பு நிறுவனங்களான வெஸ்டிங்ஹவுஸ், ஜெனரல் எலக்டிரிக் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே இது தொடர்பாக பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் பேசியுள்ளன. அப்போது, அணு விபத்து நடந்தால் அதில் தங்களுக்கு எந்த இழப்பீடு பொறுப்பும் இருக்கக் கூடாது என்றும், அதற்கான பாதுகாப்பு (Insulation from Damage Claim) வேண்டும் என்றும் கோரியதாக செய்திகள் கூறுகின்றன.

இஸ்லாமிய வங்கி முறையை இந்தியாவில் செயல்படுத்த பிரதமர் ஆவல்

இஸ்லாமிய வங்கி முறையை இந்தியாவில் செயல்படுத்த பிரதமர் ஆவல்

மலேஷியாவில் நெடுங்காலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இஸ்லாமிய வங்கி முறைக் குறித்து ஆய்வு செய்து, அதனை இந்தியாவில் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தி பார்க்கும்படியும், அதனை அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முனைய வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

வட்டியில்லா வங்கி முறையான இஸ்லாமிய வங்கியை இந்தியாவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கிக்கு பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மலேஷியாவில் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் நேற்று அந்நாட்டு பிரதமர் முஹம்மது நஜிப் துன் அப்துல் ரஜாக்கை சந்தித்து, பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல் குறித்து விரிவாகப் பேசினார். இந்த பேச்சு வார்த்தையின் பயனாக, இரு நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்துக் கொள்ள முடிவானது. இந்த ஒப்பந்தம் 2011 ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி கையெழுத்தாகிறது.

மலேஷியாவில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய வங்கி முறை குறித்து அறிய இந்தியா விரும்புகிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில், மலேஷிய அரசு நடத்தி வரும் இஸ்லாமிய வங்கி செயல்படும் முறையைப் போன்று, இந்தியாவிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கூறி வருகின்றனர். இதுபற்றி ஆராயுமாறு மத்திய ரிசர்வ் வங்கியை கேட்டுக் கொண்டுள்ளேன். மிகப் பிரமாண்ட முறையிலான இந்த வங்கியின் செயல்பாடு என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. மலேஷியாவில் வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்வதையும் வரவேற்கிறேன் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.

'எந்திரன் கதை என்னுடையது': தமிழ் எழுத்தாளர் போலீசில் புகார்



சென்னை, அக்.26: 1996-ம் ஆண்டு தான் எழுதிய சிறுகதையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைக்கதையை உருவாக்கியுள்ளனர் என எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் சென்னை போலீசில் புகார் செய்துள்ளார்.

ஆரூர் தமிழ்நாடன் என்கிற அமுதா தமிழ்நாடன் தனது வழக்கறிஞர்களுடன் வந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இதுதொடர்பாக புகார் செய்தார்.

1996-ல் ஜூஹிபா என்ற பெயரில் தான் எழுதிய சிறுகதை ஒரு இதழில் வெளியானது. அந்த சிறுகதையில் இருந்து எந்திரன் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடன் அதில் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்ததாக தமிழ்நாடன் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

காஷ்மீர் குறித்த கருத்தை கூறிய அருந்ததி ராய் மீதும் தேச ‌விரோத வழக்கு‌க்கு அனுமதி


காஷ்மீர் குறித்து தெரிவித்த கருத்தை எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததிராய் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக எப்போதும் இருந்ததில்லை. இது வரலாற்று உண்மை. இந்திய அரசுக்கும் இது தெரியும் என கருத்தரங்கு ஒன்றில் அருந்ததிராய் பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தியாவின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததிராய், இதுபோன்று பொறுப்பற்ற வகையில் கருத்து தெரிவிப்பது உண்மையில் எதிர்பாராதது என அகில இந்திய காங்கிரஸ் க‌ட்‌சி உறுப்பினர் சத்ய பிரகாஷ் மாலவியா தெரிவித்தார்.

அவரது கருத்து இந்தியாவையும், சர்வதேச சமூகத்தையும் தவறாக வழிநடத்தும் என்பதால் வரலாற்று உண்மைகளுக்கு மாறான அக்கருத்தை திரும்பப் பெற வேண்டும் என சத்ய பிரகாஷ் வலியுறுத்தினார்.


இதை பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கடுமையாகக் கண்டித்தன. தேச விரோதமாகப் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க மூத்த தலைவர் அருண் ஜேட்லி வலியுறுத்தினார்.

இதையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் எந்தச் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்வது என்பது குறித்து டெல்லி காவ‌ல்துறை‌யின‌ர் ஆலோசித்து வருகின்றனர்.

பிரிட்டிஷ் முன்னால் பிரதமர் டோனி ப்ளேய்ரின் மனைவியின் சகோதரி இஸ்லாத்தை தழுவினார்!

பலஸ்தீன விடுதலைக்கு குரல் கொடுக்கும்  மேற்கு உலக பெண்களில் மிகவும் பிரபல்யமானவர்களின் ஒருவரான Lauren Booth இஸ்லாத்தை ஏற்றுகொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

இவர் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமரான டோனி பிளயர் மனைவியின் சகோதரியாவார், இவர்  பலஸ்தீன் காஸா மீதான இஸ்ரேல்  ஆக்கிரமிப்பு முற்றுகைக்கு எதிராக  பலமாக குரல் கொடுத்து வருபவர் என்பது குறிபிடத்தக்கது  லண்டனில் நடைபெற்றுள்ள நிகழ்வொன்றில் கலந்து கொண்டு தான் ஒரு முஸ்லிம் என்று தெரிவித்துள்ளார் இவரின் அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்க ஆக்கிரமிப்பு போர் குறித்த 391,832 இரகசிய ஆவணங்கள்

ஈராக் மீது  அமெரிக்க ஆக்கிரமிப்பு போர் குறித்த 391,832    ஆவணங்களை  விக்கிலீக்ஸ் இணையதளம் நேற்று வெளிட்டுள்ளது இதில் 2004 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் வரையான காலத்தில் அமெரிக்கா உலகிற்கு மறைத்துள்ள ரகசியங்கள் கொண்டது எனினும் 2004ஆம் ஆண்டு மே மாதம் மற்றும் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாத சம்பவங்கள் உள்ளடக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது    (except for the months of May 2004 and March 2009)


விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள இரகசிய ஆவணங்களில் பிரகாரம் 2004 தொடக்கம் 2009 ஆண்டு வரையுள்ள 6 ஆண்டுகளில் ஈராக்கில் 109,032 பேர் கொல்லப்பட்டுள்ளனர் இவர்களின் 60 வீதமானவர்கள் பொது மக்கள் என்று விக்கிலீக் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு உதவும் ஈராக் பொம்மை நிர்வாகத்தின் படைகள் அமெரிக்க சித்திரவதை களுக்கு மேலதிகமாக மிக மோசமான சித்திரவதைகளை ஈராக் மக்கள் மீது மேற்கொண்டு  வருகின்றமையும் அந்த சித்திரவதை எதையும் அமெரிக்க படைகள் கண்டு கொள்வதில்லை என்பதையும் விக்கிலீக் இரகசிய ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன
இந்த இரகசிய ஆவணத்தில் அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகள் மேற்கொண்ட 271171 தாக்குதல்கள், 104272 போராளிகளின் தாக்குதல்கள், 128693 குண்டு வெடிப்புகள்  ,1328 தமக்கு தாமே தாக்கி கொண்டமை Friendfly Fire பற்றிய தகவல்கள் அடங்களாக பல தலைப்புகளில் தகவல்களை  விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது, அமெரிக்க வரலாற்றில் வெளியான மிகப் பெரிய இரகசியமாக இது கருதப்படுகின்றது நேரடியாக இவற்றை பார்வையிட இங்கு கிளிக் செய்யவும்

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கவில்லை: அருந்ததி ரா‌ய்

''ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஒருபோதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கவில்லை'' எ‌ன்று பிரபல எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததி ராய் தெரிவித்து‌ள்ளா‌ர்.

காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தது குறித்து அரு‌ந்த‌தி ரா‌ய் பே‌சிய பே‌ச்சு சர்ச்சையானதை‌த் தொட‌‌ர்‌ந்து, தற்போது இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகரில் சமூக அமைப்புகளின் கூட்டமைப்பு நடத்திய கருத்தரங்கு ஒன்றில் அருந்ததி ராய் உரையாற்றினார். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஒருபோதும் இருக்கவில்லை. இது வரலாற்று உண்மை. இந்திய அரசும் இதை ஏற்றுக்கொண்டுள்ளதாக அருந்ததி ராய் அப்போது குறிப்பி‌ட்டு‌ள்ளா‌‌ர்.

Amazing Kids Dance

<a href="http://www.linkedtube.com/NiYogXsQM4Ec397f801db0f3171f010c1318bdd7eef.htm">LinkedTube</a>

தரையிலும் தண்ணீரிலும் ஓடும் பைக்!

திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி புது தெருவை சேர்ந்த 22 வயதான முஹம்மது தஃபீக் அலி இன்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிகல் இன்ஜினியரிங் படிப்பபை இந்த ஆண்டு முடித்துள்ளார். இறுதி ஆண்டு படிப்பிற்காக ஒரு ப்ராஜக்ட் செய்ய நினைத்த முஹம்மது தஃபீக் அதை ஒரு சாதனையாக செய்ய வேண்டும் என திட்டமிட்டார்.
தரையிலும் தண்ணீரிலும் ஒடும் பஸ் மற்றும் சைக்கிள்கள் தொழில்நுட்பத்தில் முன்னேரிய நாடான அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் ஏற்கனவே இருக்கின்றது எனவே‘எரவாஞ்சேரியில் இருக்கும் நாம் புதுமையாக தண்ணீரிலும் தரையிலும் ஓடும் ஸ்கூட்டரை தயாரிப்போம்’ என முடிவு செய்த முஹம்மது தவ்ஃபீக் 6 மாத காலத்தில் தனது இந்த கனவை நினைவாக்கி தற்போது சாதனை படைத்துள்ளார்.

அவருக்கு சொந்தான எம்எய்ட்டி பைக்கை வைத்து இந்த புதிய கண்டுபிடிப்பை அவர் தயாரித்துள்ளார். இதற்கு அவருக்கு ஆன செலவு ரூபாய் 6 ஆயிரம் மட்டும் தான்!
தண்ணீரில் சுமார் 40 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் இந்த பைக்கை தரையிலும் ஓட்டிக்க கொள்ளலாம்.
தனது கண்டுபிடிப்பை எருமைப்பட்டியில் உள்ள குளம் ஒன்றில் பொதுமக்கள் முன்னிலையில் ஓட்டிக்காட்னார் முஹம்மது தஃபீக்!
இவரது இந்த கண்டு பிடிப்பை பற்றிய செய்தி சன்நியுஸ், கலைஞர் போன்ற அனைத்து தொலைக்காட்சிகளிலும் மற்றும் தினகரன் தினதந்தி போன்ற அனைத்து நாளிதழ்களிலும் வெளியானது குறிப்பிடதக்கது.
இவரது இந்த சாதனை மற்ற மாணவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்
‘நம்ம ஊர்ல இருந்துகிட்டு என்னத்த செய்யமுடியும் என தங்களது இயலாமைக்கு வேறு பெயர் சூட்டிக் கொள்ளாமல் சாதனை செய்ய பணமோ வசதியோ நாம் வசிக்கும் ஊரோ ஒரு தடை அல்ல என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.
முஹம்மது தஃபீக் அப்படி நினைத்திருந்தால் அவரது இந்த கண்டுபிடிப்பு வெளிவந்திருக்காது. தண்ணிடம் இருந்த பழைய பைக், வெறும் 6 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அருகில் உள்ள குளம், இதுவே முஹம்மது தஃபீக் சாதனைக்கு போதுமானதாக இருந்துள்ளது.
தனது இந்த கண்டுபிடிப்புக்கு காப்புரிமை கோரி பதிவு செய்துள்ளதாக முஹம்மது தஃபீக் நம்மிடம் தெரிவித்துள்ளார்.
நமது மாணவர்களின் இது போன்ற சாதனைகள் தொடர வேண்டும்.

நிலவில் உப்பு, வெள்ளி, தண்ணீர் !











கடந்த ஆண்டு நாசாவின் ராக்கெட் ஒன்று நிலவில் மோதி ஏற்படுத்திய பள்ளம் தொடர்பான விரிவான தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
நாசாவின் ‘ல்க்ராஸ்’விண்வெளி திட்டத்தின்படி, நிலவின் தென்கோடியில் மிகவும் ஆழமான, இருட்டான பள்ளம் ஒன்றில் ராக்கெட் ஒன்று ஏவப்பட்டது.

இந்த பள்ளத்திற்குள் ஒரு போதும் சூரிய வெளிச்சம் பட்டதில்லை. மேலும் இந்த இடமானது சூரிய குடும்பத்தில் மிகவும் குளிர்ச்சியான பகுதி என்றும் எண்ணப்படுகிறது.

ராக்கெட் பள்ளத்தை தாக்கியவுடன், பள்ளத்தில் இருந்து புகை மற்றும் வாயுக்கள் வெளியாகின, இதனை ராக்கெட் பின்னாலே சென்ற விண்கலம் பதிவு செய்தது, பின்னர் அந்த தகவல்கள் ஆராய்ப்பட்டன.

ராக்கெட் மோதியவுடன் பெரும் புகை அல்லது பெரும் ஜாலம் ஏற்படும் என்று நினைத்து இருந்த ஆராய்ச்சியாளர்கள் அவ்வாறு இடம்பெறாத காரணத்தால் முதலில் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் ஆச்சரியங்கள் தங்களுக்கு காத்திருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் இப்போது தெரிவித்துள்ளனர்.

இந்த சோதனையில் தன்னுடைய கணிப்புகள் குறித்து அமெரிக்காவின் பிரவுன் பல்கலைகழகத்தின் பேராசிரியர் பீட்டர் ஷுல்ஸ் ‘சைன்ஸ் திஸ் வீக்’ என்ற சஞ்சிகையில் குறிப்பிட்டுள்ளார். இதில் அந்த பள்ளத்தின் அடித்தளத்தில் தண்ணீர் மற்றுமன்றி இன்னும் ஏராளமான பொருட்கள் இருப்பதாக கூறியுள்ளார்.

கரியமிலவாயு, அமோனியா, உப்பு, வெள்ளி போன்றவை இங்கே இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்தோடு இப்போது கிடைத்திருக்கும் சூரிய குடும்பம் எப்படி உருவானது என்பதற்கான பதிலை கண்டுபிடிக்கவும் உதவலாம் என்று கருதப்படுகிறது.

கருவேப்பிலை !

Nutrition in Curry Leaves - Food Habits and Nutrition Guide in Tamil
கருவேப்பிலையை சமையலுக்கு மட்டும் பயன்படுத்தாமல் அதை உணவில் சேர்த்து உண்டால், உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
தொற்று நோயை தடுக்கும் ஆற்றல் கருவேப்பிலைக்கு உண்டு. கருவேப்பிலையை உண்டால் கண் பார்வை கோளாறுகள் நம்மை அணுகாது.

புரதம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, வைட்டமின் சி இதில் நிரம்ப உள்ளது.

வாய்ப்புண்ணை குணமாக்கும். பல் ஈறுகளை வலுப்படுத்தும். வயிறு தொடர்பான சிக்கல்களை விரட்டி அடிக்கும் வலிமை கருவேப்பிலைக்கு நிரம்பவே உண்டு.

மலச்சிக்கலை போக்கும். ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். பேதியை கட்டுப்படுத்தும். பித்தத்தை மாற்றி வாந்தியை தடுத்து வயிற்று இரைச்சலை தொலைக்கும்.

பசி எடுக்கவில்லையா? ஜீரண மந்தமா? கருவேப்பிலையை வறுத்து மிளகு, சீரகம், சுக்கு இவற்றை பொடி செய்து உப்பு சேர்த்து சோறுடன் பிசைந்து உண்ணுங்கள். பசி உங்களை கூவி அழைக்கும்.



Your Ad Here

எடை கூடாமல் இருக்க...


  • தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
  • கொழுப்புச் சத்து, மாவுச் சத்து அதிகம் உள்ள உணவைக் குறைத்துக் கொள்ளவேண்டும்.
  • காபி, டீ அதிகம் குடிக்கக் கூடாது.
  • பச்சைக் காய்கறிகள், கீரை, பழ வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
  • இரவு உணவை 8 மணிக்குச் சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அப்படி சாப்பிட முடியாதவர்கள் இரவு உணவை பச்சைக் காய்கறிகள், பழங்கள் என மாற்றிக் கொள்ளவேண்டும்.
  • படுக்கைக்குச் செல்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னரே இரவு உணவை முடித்துக்கொள்ளவேண்டும்.
  • இனிப்பு, புளிப்பு உள்ள உணவு வகைகளைக் குறைத்துக் கொள்ளவேண்டும்.
  • தினமும் 30 முதல் 45 நிமிஷங்கள் வரை நடைப்பயிற்சி செய்யவேண்டும்.
  • முடிந்த அளவு பகலில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
  • ஃபாஸ்ட்ஃபுட், ஐஸ்கிரீம், சாக்லேட் உள்ளிட்ட நொறுக்குத் தீனி அதிகம் கூடாது.

இதயத்தை இரும்பாக்கும் மீன்!

காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றில் இல்லாத சத்துக்களே இல்லை தானே. ஆனாலும், அசைவ உணவை எடுத்துக் கொண்டால், மீன் உணவில் இருக்கும் "ஒமேகா 3 ஃபேட் ஆசிட்(Omega-3 Fatty Acids)" என்பது அரிய மருத்துவ குணம் வாய்ந்தது.

உலகம் முழுக்க உள்ள மருத்துவ நிபுணர்கள், இதை சொல்லி வருகின்றனர். வாரத்துக்கு ஒரு முறையோ, இரு முறையோ சாப்பிட்டால் கூட போதும், இருதயம் இரும்பாகத்தான் இருக்கும். இருதய பாதிப்பு கூட பயந்து ஓடிவிடும்.

சிறிய வயதில் ஆஸ்துமா உள்ளவர்கள், மீன் சாப்பிட்டால், ஆஸ்துமா பறந்துவிடும். மீன் உணவுகளை எப்படி சாப்பிட்டாலும், அதன் மருத்துவ குணம் போய் விடுவதில்லை. எந்த வகை கேன்சரும் வராமல் பாதுகாக்கும். ரத்த அடைப்பு, ரத்த ஓட்டம் பாதிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. மூளை, கண்களுக்கு மிக நில்லது.

வயதானவர்களுக்கு அல்சீமர்ஸ்(Alzheimer"s) உட்பட மறதி நோய் வரக்கூடும். அதை தடுக்க மீன் உணவு தான் நல்லது. சர்க்கரை நோய், டிப்ரஷன்(Depression) உள்ளவர்களுக்கும் மீன் உணவு தான் நல்லது.

எந்த வகை மீனிலும், 500 மில்லி கிராம் முதல் 1500 மில்லி கிராம் வரை ஒமேகா 3 ஃபேட் ஆசிட்(Omega-3 Fatty Acids) உள்ளது. ஆனால், நம் உடலுக்கு தேவை, 200 முதல் 600 மில்லிகிராம் வரை தான். அதனால் வாரம் ஒரு முறை மீன் உணவு சாப்பிட்டால் கூட நல்லது தான். மீன் எண்ணெய் தோய்த்த இரண்டு பிரெட் துண்டில் 27 மில்லி கிராம், மீன் எண்ணெய் தோய்த்த முட்டையில் 200 மில்லி கிராம், தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால், அதில் 40 மில்லி கிராம் என்ற அளவில் ஒமேகா ஆசிட் உள்ளது.

கேப்சூலை விட...

இப்போதெல்லாம் எதற்கும் மாத்திரையை விழுங்குவது தான் பேஷனாகி விட்டது. மீன் என்றாலே, ஙே...என்று விழிக்கும் சைவ உணவினர் பலரும், இருதய பலத்துக்காக, ஒமேகா 3 ஃபேட் ஆசிட்(Omega-3 Fatty Acids) உள்ள கேப்சூல் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகின்றனர்.

ஆனால், இதில் ஒமேகா ஆசிட் சத்துக்கள் இருக்கிறது என்றாலும், இதை விட மீன் உணவில் தான் பல மடங்கு ஒமேகா ஆசிட் உள்ளது. அதனால், மீன் உணவு சாப்பிடுவது தான் நல்லது.

பிறந்த குழந்தைகள் சில, உரிய வயது ஆகியும் நடக்காது. அதுபோல சரிவர பேச்சு வராது. அப்படியிருக்கும் குழந்தைகளுக்கு மீன் உணவு மிக நல்லது. நல்ல பலன் கிடைக்கும். தசைகள், மூட்டு வலி போன்றவற்றுக்கும் மீன் நல்ல மருந்து.

மற்ற உணவு வகைகளை விட, மீனில் தான் அதிகமான மெர்க்குரி என்ற பாதரசம் உள்ளது. இது உடலுக்கு கெடுதல். ஸ்வார்டு பிஷ், மர்லின் ரே, ஜெம் பிஷ், லிங், ஆரஞ்சு ரக்பி, சதர்ன் ப்ளூ பிஷ் போன்ற மீன்களில் பாதரசம் அதிகம் உள்ளது.

அதனால், அதிகமாகவும் மீன் உணவு சாப்பிடுவது என்பதும் சரியல்ல. மேலும், அசுத்த தண்ணீரில் மீன் பிடித்து அதை உணவாக சமைத்து சாப்பிடுவதால் பயனில்லை. மீன்(Fish) உணவு சமைக்கும் போது, அதன் அடர்த்தியான பாகங்களை வேக வைக்கும் போது, ஒரு சென்டிமீட்டர் அடர்த்தி என்றால், மூன்று முதல் நான்கு சென்டிமீட்டர் வரை அடர்த்தி உள்ள பாகத்தை 20 நமிடம் வரை வேக வைக்க வேண்டும். அப்போது தான் நல்லது.

மலேரியாவால் மரணமடைவோர் அதிகம்!

கொசுக்களால் மலேரியா பரவுகிறது
கொசுக்களால் மலேரியா பரவுகிறது
இந்தியாவில் மலேரியாவில் பலியாவோரின் எண்ணிக்கையானது மிக குறைவாக மதிப்பீடப்பட்டுள்ளதாக புதிய ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. ‘ தி லான்செட்’ மருத்துவ சஞ்சிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆண்டுக்கு சுமார் இரண்டு லட்சம் பேர் மலேரியாவால் இந்தியாவில் பலியாவதாக கூறியுள்ளது. இது உலக சுகாதார அமைப்பு கூறும் எண்ணிக்கையை விட பதிமூன்று மடங்கு அதிகம்.


அறிக்கையில் பலியானவர்களில் 90 சதவீதம் பேர் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் 86 சதவீதம் பேர் மருத்துவ கவனிப்பு இல்லாமல் வீட்டிலேயே பலியாகிவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதாவது தற்போது உலக சுகாதார அமைப்பு கூறி வரும் எண்ணிக்கை என்பது நம்ப கூடியது அல்ல என்றும், அந்த எண்ணிக்கையானது மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் தெரிவிக்கப்படுகின்றது என்றும் அறிக்கை கூறுகிறது.


ஆனால் ‘தி லான்செட்’ வெளியிட்டுள்ள எண்ணிக்கையை மறுதலித்துள்ள உலக சுகாதார அமைப்பு இந்த எண்ணிக்கை வீடு வீடாக சென்று எடுக்கப்பட்டது என கூறியுள்ளது. மேலும் அறிக்கை கூறும் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாகவும் கூறுகிறது. ஆனால் இந்த ஆய்வை நடத்திய குழுவில் இடம்பெற்று இருந்த பேராசிரியர் பிரபாத் ஜா, தங்களுடைய அறிக்கை உண்மை நிலவரத்தை காண்பிக்கிறது என கூறியுள்ளார்.


விரைவாக சிகிச்சை கொடுத்தால் குணமாக கூடிய நோய் தான் மலேரியா. ஆனால் உயிரை காப்பாற்ற கூடிய சிகிச்சை பலருக்கு கிடைக்காமல் இருக்கிறது என்பதை தான் இந்த அறிக்கை பிரதிபலிப்பதாக உள்ளது.

பெருஞ்செலவு செய்து அவப்பெயர்

தில்லியில் நடந்துமுடிந்த 19-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளால் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு அவப்பெயரே ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர் தெரிவித்துள்ளார்.
 
இந்தப் போட்டிகளை நடத்துவது இந்தியாவின் தகுதிக்கு மீறிய செயல் என்றும், விளையாட்டுக்கு இவ்வளவு தொகையை செலவிடுவதை விட வறுமையை ஒழிக்க முன்னுரிமை அளிப்பதுதான் விவேகமான செயல் என்றும் கடுமையான விமர்சனங்களை இந்தியாவின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான மணிசங்கர் ஐயர் வெளியிட்டுள்ளார்.

எழுபதாயிரம் கோடி ரூபாய்களைச் செலவு செய்து நமக்கு நாமே அவப்பெயரைத் தேடிக்கொண்ட செயல்தான் இந்த விளையாட்டுப் போட்டிகளை இந்தியா நடத்தியது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் போட்டிகளில் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக அதிக பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

கொலை வழக்கில் சவூதி இளவரசருக்கு 20 ஆண்டு சிறை



சவூதி இளவரசருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சவூதி இளவரசரான சவுத் அப்துல் அஜிஸ் பின் நாசர் அல் சவுத் தன்னுடய பணியாளரை கொலை செய்த வழக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தீர்ப்பு வழங்கிய நீதிபதி பீன் கூறுகையில், "ஒரு இளவரசர் தண்டனைக்கு உள்ளாவது வழக்கமாக இல்லாத ஒன்று. சட்டத்துக்கு அப்பாற்பட்டு இந்த நாட்டில் யாருக்கும் இடம் இல்லை.

சவூதி அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவரான உங்களுக்கு இதை விட கடுமையானதாகவோ அல்லது குறைவாகவோ தண்டனை வழங்குவது எனக்கு தவறான ஒன்றாகும்" என்றார்.

Amazing Russian Kids Reality Show

மத மோதலுக்கு வித்திடுகிறதா மசூதி ஒலி பெருக்கி?


பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து நடைபெற்ற மும்பை கலவரத்திற்கு பின்னர் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவதை ஓரளவு குறைத்துக் கொண்டிருந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரே, கடந்த சில தினங்களாக இஸ்லாமியர்களை சீண்டத் தொடங்கியுள்ளார்.

கடந்த வாரம் மும்பை நகரிலுள்ள சாந்தாகுரூஸ் என்ற இடத்தில் அமைந்திருக்கும் மாநகராட்சி மருத்துவமனை ஒன்றில், இரண்டரை மாத ஆண் குழந்தை ஒன்று கடத்தப்பட்டது. இது குறித்து குழந்தையை பறிகொடுத்த பெண், காவல்துறையில் அளித்த புகாரில், பர்தா அணிந்த பெண் ஒருவர்தான் தனது குழந்தையை கடத்திச் சென்றிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாராம்.

இது குறித்து செய்தி வெளியானதுமே, அதனை வகையாக பிடித்துக்கொண்டார் தாக்கரே.

இது தொடர்பாக தனது கட்சி பத்திரிகையான "சாம்னா" வில், "குழந்தையை திருடுவதற்கு பர்தா பயன்படுத்தப்படுகிறது எனில் சட்டப்படி அதைத் தடை செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் "பர்தா" வையும், உடல் முழுவதையும் மறைக்கும் வகையிலான ஆடைகளையும் தடை செய்துள்ள பிரான்ஸ் அரசை வெகுவாக பாராட்டியிருந்த தாக்கரே, பர்தாவை தடைசெய்து ஒரு புரட்சிகரமான நடவடிக்கையை பிரான்ஸ் அதிபர் சர்கோஸி எடுத்துள்ளதாகவும் புகழாராம் சூட்டியிருந்தார்.

பால் தாக்கரேவின் இந்த கருத்து மற்ற பத்திரிகைகளிலும் வெளியாக மும்பை இஸ்லாமியர்களிடையே இலேசாக முணுமுணுப்பு கிளம்பத் தொடங்கியது.

அதே சமயம் மும்பை கலவரத்தில் வெகுவாக பாதிக்கப்பட்டதால், அதற்கு பின்னர் மும்பையில் வசிக்கும் இஸ்லாமியர்களும் சரி, இந்துக்களுக்கும் சரி, கலவரத்திற்கு பிறகு நடந்த எத்தனையோ - 2008 ல் நடந்த தாக்குதல் உள்பட - குண்டுவெடிப்புகளுக்கு பின்னரும் உணர்ச்சிவசப்படாமல் மிக பக்குவமாக பிரச்சனையை அணுகி, மிகுந்த மன முதிர்ச்சியுடன் நடந்துகொண்டனர்.

அதே சமயம் தாக்கரே போன்றவர்களும் அடக்கியே வாசித்தனர்.அதிலும் சமீபத்தில் அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் அலாகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு முன்னர், ஒட்டுமொத்த இந்தியாவுமே ஒருவித பதற்றத்தில் இருந்தது என்றால், மும்பையில் அந்த பதற்றம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. "மீண்டும் ஒரு கலவரத்தை மும்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டு விடுமோ? " என்ற கவலை இருதரப்பு சமூக தலைவர்களிடமுமே குடிகொண்டிருந்தது.

ஆனால் தீர்ப்பு வெளியான பின்னர் அப்படியான ஒரு சம்பவம் ஏதும் நடந்துவிடாமல் மும்பைவாசிகள் மிக கவனத்துடன் நடந்துகொண்டது, ஒட்டுமொத்த இந்தியாவையுமே மூக்கின் மேல் விரலை வைக்க வைத்தது.

இப்படியான ஒரு சூழ்நிலையில்தான் மீண்டும் திரி கொளுத்த தொடங்கியுள்ளார் தாக்கரே. கடந்த சில வருடங்களாக பாலிவுட் "கான்" நடிகர்களின் பாகிஸ்தான் பற்று குறித்து மட்டும் காட்டம் காட்டி வந்த அவர், இப்போது நேரடியாகவே இஸ்லாமிய சமூகத்தினர் பின்பற்றும் சில மதச் சம்பிரதாயங்கள் பொது பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதாக உள்ளது என்று பந்தம் கொளுத்தியுள்ளார்.

கடந்த வாரம் இஸ்லாமிய பெண்கள் அணியும் "பர்தா" உடைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று திருவாய் மலர்ந்திருந்த நிலையில், தற்போது மசூதிகளின் மேல் கட்டப்பட்டிருக்கும் ஒலி பெருக்கிகளால் அக்கம் பக்கம் வசிப்பவர்களுக்கு, குறிப்பாக வீட்டில் பாடம் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, மிகுந்த இடைஞ்சல் ஏற்படுவதாகவும், ஆனால் காவல் துறை அவர்கள் மீது வழக்கு ஏதும் போடாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக தனது "சாம்னா" பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், அண்மையில் மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் நடந்த சிவசேனாவின் தசரா பொதுக்கூட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஒலி பெருக்கிகளில் இருந்து வெளியான ஒலி, நிர்ணயிக்கப்பட்ட டெசிபல் அளவைவிட கூடுதலாக இருந்ததாக வழக்குப் பதிவு செய்த காவல்துறைக்கு, மும்பை நகரில் உள்ள ஆசாத் மைதானம், பெண்டி பஜார் மற்றும் பெரம்பாடா போன்ற இடங்களில் உள்ள மசூதிகளில் கட்டப்பட்டிருக்கும் ஒலி பெருக்கிகளிலிருந்து வெளியாகும் அதிக அளவு சப்தத்தினால், அப்பகுதிகளில் வசிக்கும் இதர சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இரவில் தூங்க முடியாமல் தொல்லை ஏற்படுவதையும், குழந்தைகள் பாடம் படிக்க முடியாமல் அவதிப்படுவதையும் அறியமுடியவில்லையா?

அந்த ஒலி பெருக்கிகளை கட்டிய மசூதி நிர்வாகத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தாதர் சிவாஜி பார்க்கில் நடைபெற்ற தசரா பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கும் முன்னர், ஒலி பெருக்கியின் சப்தம் மும்பை உயர் நீதிமன்றம் வரையறுத்த 50 டெசிபல் அளவுக்குள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்த காவல்துறை.

ஆனால் அன்றைய கூட்டத்தில் ஒலி பெருக்கியிலிருந்து வெளிப்பட்ட சபதத்தின் அளவு 50 டெசிபலை தாண்டியதோடு, சிவசேனாவின் கர்ஜனையை யாராலும் அடக்கவோ அல்லது அமுக்கவோ முடியாது என்று பால் தாக்கரே பகிரங்கமாக சவாலும் விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறியதாக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த சிவசேனா நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்தது காவல்துறை.

இதனை தனது கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ள தாக்கரே, "சட்டவிரோதமாக மும்பையில் வந்து குடியேறி இருப்பவர்களது ( பங்காளதேஷ் முஸ்லிம்கள்) மசூதியின் ஒலி பெருக்கியிலிருந்து வெளிவரும் சப்தம் 500 டெசிபலை தாண்டி காதை கிழிக்கிறது. அதனை காவல்துறை வேடிக்கை பார்க்கிறது.

சட்டம் எங்களுக்கும் தெரியும். அதனை யாரும் எங்களுக்கு கற்றுத்தர வேண்டாம்; எங்களது உணர்வுகளை சட்டம் உணர்ந்துகொண்டால், பின்பு நாங்களும் சட்டத்தை மதிப்போம்" என்று மேலும் காட்டம் காட்டியுள்ளார்.

Copyright © 2009 News and Entertainment All rights reserved.