Feed

ஃபேஸ்புக்கில் தெரிவிக்கக் கூடாதவைகள்

கூகுளையே மிரள வைக்கும் அளவுக்கு கிடுகிடு வளர்ச்சியை எட்டியுள்ள ஃபேஸ்புக் சமூக வலைத்தளம், இன்றைய இளைய சமூகத்தினரின் இணைய டைரி என்றால் அது மிகையில்லை.
 
அந்த அளவுக்கு நாட்டு நடப்பு முதல் வீட்டு நடப்பு வரை எல்லாவற்றையும் அதில் எழுதி தள்ளிவிடுகிறார்கள் ஆர்வத்தில் அலைமோதும் இளையதலைமுறையினர்!

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதற்கான ஒரு வேடிக்கையான மற்றும் ஜாலியான வழிமுறை ஃபேஸ்புக் என்றாலும், இத்தகைய சமூக வலைத்தளங்களில் நம்மை பற்றிய குறிப்புகளை வெளியிடும்போது - குறிப்பாக பெண்கள் - மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

அவ்வாறு எச்சரிக்கையாக இருக்கவேண்டியவை எந்த மாதிரியான விடயங்களில், எது எதை தெரிவிக்கலாம், எவற்றை தெரிவிக்கக்கூடாது என்பது குறித்து நிபுணர்கள் கூறுவதை பார்க்கலாம்.

" நமது சொந்த புகைப்படம் (மார்ஃபிங்கில் மாற்றப்படும் ஆபத்து) உள்பட சில வகையான புகைப்படங்களை நமது வலைப்பக்கத்தில் ஏற்றுவது ஆபத்தாக முடியலாம்.யாராவது அவதூறாக பேசலாம் அல்லது ஏதாவது குற்றத்திற்கோ அல்லது அதைவிட மோசமான நிகழ்வுகளுக்கோ ஆட்பட நேரிடலாம்.

"டேட்டா மைனிங்" - data mining - என்றழைக்கப்படும் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் உள்ளன. இவை ஃபேஸ்புக்கை துளாவி நமது பிறந்த தேதி, தொலைபேசி எண்கள், முகவரிகள் போன்றவற்றை எடுத்துவிடும். அப்படி கிடைக்கும் விவரங்கள் கிரிமினல் காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு தங்கக்கட்டிக்கு சமமானவை" என்கிறார் பிரபல தகவல் தொழில்நுட்ப நிபுணரான டேவ் ஒயிட்லெக்.

எனவே பிறந்த தேதி, தொலைபேசி எண்கள், முகவரிகள் போன்றவற்றை ஃபேஸ்புக் தளத்தில் தெரிவிக்ககூடாது. இந்த விவரங்கள் திருடப்பட வாய்ப்புள்ள நிலையில், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றின் இணைய பயன்பாட்டின்போது "பாதுகாப்பு கேள்விகள்" - security questions - , கடவுச்சொல் - password - ஆக கேட்கப்படுபவற்றில் மேற்கூறியவைதான் முதன்மை பங்காற்றுகிறது.

எனவே மேற்கூறிய விவரங்களை தெரிவிப்பது எத்தனை ஆபத்தானது என்பதை புரிந்துகொள்ளலாம்.

அதேப்போன்று, வங்கி விண்ணப்பங்கள், இணையத்தின் மூலமான வங்கி பண பரிவர்த்தனை போன்றவற்றில் நீங்கள் யார் என்பதன் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள கேட்கப்படும் பாதுகாப்பு கேள்விகளில்,உங்களது தாயாரின் முதல் பெயர் என்ன என்பது கேட்கப்படுகிறது.

மேலும் நீங்கள் முதன் முதலில் படித்த பள்ளியின் பெயரும் கேட்கப்படுவது வழக்கமாக உள்ளது.
எனவே இத்தகைய விவரங்களையும் தெரிவிக்காமல் தவிர்ப்பது நல்லது.

அவ்வாறு செய்வது நமது அடையாள திருட்டை தவிர்க்க வைப்பதோடு, கொள்ளையர்கள் மற்றும் திருடர்களிடமிருந்தும் நம்மை காப்பாற்றும்.

மேலும் நீங்கள் உங்களது ஃபேஸ்புக் தளத்தில் உங்களது அன்றாட நடவடிக்கைகள் குறித்த தகவல்களை தெரிவிக்கும் வழக்கமுடையவர்களாக இருந்தால், " அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை வீட்டில் இருக்கமாட்டேன்..., 2 ஆம் தேதி ஊருக்கு செல்கிறேன்; திரும்பி வர 10 நாட்கள் ஆகும்..." என்றெல்லாம் தெரிவிக்காதீர்கள்.

இப்படி தகவல்களை உளறிக்கொட்டுவது திருடர்களையும், கொள்ளையர்களையும் நாமே வெற்றிலை பாக்கு வைத்து நமது வீட்டிற்கு கொள்ளையடிக்க வர அழைப்பதற்கு சமமாகிவிடும்.

மேலும் சாதி, மதம், இனம் குறித்த அவதூறான கருத்துக்களை தெரிவிப்பதோ அல்லது சட்டவிரோத புகைப்படங்களை போடுவதோ கூடாது. அவ்வாறு செய்வது உங்களது வாழ்க்கைக்கே ஆபத்தாகக் கூட போய்விட வாய்ப்புள்ளது.

மேலும் நமது தொலைபேசி எண்களை குறிப்பிடுவதால், அதை வாங்குங்கள்...இதை வாங்குங்கள், லோன் தருகிறோம், மருத்துவக் காப்பீடு போடுங்கள்... என்றெல்லாம் வரும் தொ(ல்) லை பேசி அழைப்புகளையும் சந்திக்க வேண்டியதிருக்கும்.

அத்துடன் இப்போதெல்லாம் குழந்தைகள் கடத்தல் அதிகமாகி வருகிறது.அப்படி இருக்கையில் நம்மை பற்றிய விவரங்களை ஃபேஸ்புக் தளத்திலிருந்து சேகரித்துக்கொண்டு, நமது குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போதோ அல்லது வெளியில் தனியாக செல்லும்போதோ நம்மை பற்றிய விவரங்களை கூறி, நான் உனது பெற்றோருக்கு தெரிந்தவன்தான் என்பதுபோல் காட்டிக்கொண்டு நமது குழந்தைகளை கடத்தவும் வாய்ப்புண்டு.

எனவே ஃபேஸ்புக் போன்ற தளங்களில் உங்களது பெயரை தவிர, உங்களைப்பற்றிய வேறு எவ்வித அந்தரங்க தகவல்களையும் தெரிவிக்காதீர்கள்!

பாக்தாத் பணயக் கைதிகளை விடுவிக்கும் முயற்சியில் பலர் உயிரிழப்பு

ஈராக் தலைநகர் பாக்தாதில் கிருத்தவத் தேவாலயம் ஒன்றில் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்தவர்களை விடுவிக்க ஈராக்கிய இராணுவத்தினர் அதிரடி முயற்சியில் இறங்கியதில் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டதாக உதவி உட்துறை அமைச்சர் மேஜர் ஜெனரல் உசைன் கமால் தெரிவித்தார். இத்தாக்குதலில் ஆயுததாரிகள் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.


தேவாலயம் ஒன்றில் பிற்பகல் ஆராதனைக்காகக் குழுமியிருந்த கிட்டத்தட்ட 100 பேர் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள தமது அல்-கைடா சகாக்களை விடுவிக்குமாறு தீவிரவாதிகள் கோரிக்கை விடுத்தனர்.


இத்தாக்குதலை நடத்தியவர்கள் ஈராக்கியர்கள் அல்லர் எனவும், வெளிநாட்டைச் சேர்ந்த அரபுக்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி 1700 மணிக்கு பெரும் குண்டுச் சத்தமும் பின்னர் துப்பாக்கிச் சூடுகளும் கேட்டதாக பாக்தாதின் கராடா மாவட்டத்து மக்கள் தெரிவித்தனர்.


ஈராக்கின் பங்குச் சந்தைக் கட்டடத்தை முதலில் தாக்கிய தீவிரவாதிகள் பின்னர் அருகில் இருந்த கத்தோலிக்கத் தேவாலயத்தினுள் நுழந்தனர் என்றும் அங்கிருந்த காவலாளிகள் சிலருடன் நடந்த மோதலில் சில காவலாளிகள் உயிரிழந்தனர் என்றும் காவல்துறை தெரிவித்தது.


இதனையடுத்து பாதுகாப்புப் படையினர் தேவாலயத்தைச் சூழ்ந்து அதிரடித் தாக்குதலை நடத்தத் தொடங்கினர். ஆலயத்தினுள் இடண்டு குண்டுச் சத்தங்கள் கேட்டதாகவும், துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தீவிரவாதிகள் கிரனைட்டுகளை எறிந்ததாகவும், தற்கொலைக் குண்டுகளை வெடிக்க வைத்ததாகவும் தெரிகிறது.


6 தீவிரவாதிகள் உட்பட 52 பேர் கொல்லப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். இவர்களில் பொதுமக்களும் பாதுகாப்புப் படையினரும் அடங்குவர். 56 பொதுமக்கள் காயமடைந்தனர்.


ஈராக்கில் அரை மில்லியன் கிறித்தவர்கள் வசித்து வருகின்றனர். 2003 அமெரிக்கத் தாக்குதல்களை அடுத்து ஈராக்கிய கிறித்தவர்கள் பெருமளவில் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

Technology 'Can't Beat PETN Bomb Threat'


Air security expert Kim O'Neil tells Jeff Randall Live technology is powerless to detect and defeat the threat from PETN bombs.

ஆர்.எஸ்.எஸ். க்கு தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்பு


ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் சகோதர அமைப்புகளுக்கு தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்பு இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி குற்றம் சாற்றியுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட சுற்றறிக்கையில், மேற்கூறிய குற்றச்சாற்றுக்கள் இடம்பெற்றுள்ளது.

சமீபத்தில் நடத்தப்பட்ட விரிவான விசாரணையில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் சகோதர அமைப்புகளின் உண்மையான குணாதிசியம் அம்பலமானதாகவும், இந்த அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடபட்டுள்ளது.

நாட்டின் கட்டமைப்பை தகர்க்கும் நோக்குடன் மதவாத மற்றும் தீவிரவாத சக்திகள் எதிலிருந்து உருவெடுத்தாலும், அதற்கு எதிராக என்ன விலை கொடுத்தேனும் காங்கிரஸ் கட்சி போராடும்.

மத துவேஷங்களை பரப்பும் மற்றும் மத அடிப்படையில் மக்களிடையே பிரிவினையை தூண்டும் அது போன்ற அனைத்து சக்திகளுக்கு எதிராகவும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி போராடும் என்று அந்த சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள், கூட்ட முடிவில் நிறைவேற்றப்பட்ட உள்ள தீர்மானங்களில் இடம்பெறக்கூடும் என்று தெரிகிறது.

போதை மருந்தைவிட மது மோசம்

ஹெரொயின் மற்றும் கொக்கெயின் போன்ற போதை மருந்துகளை விட மதுபானம் ஏற்படுத்தும் பாதிப்புத்தான் அதிகம் என்று பலராலும் மதிக்கப்படுகின்ற த லான்செட் மருத்துவ சஞ்சிகை கூறுகிறது.
சமூக மட்டத்தில் மதுவின் பாதகந்தான் அதிகம்

போதை மருந்துகளால் தனி நபர்களுக்கு மாத்திரமல்லாமல், பரந்துபட்ட சமூகத்துக்கே ஏற்றபடக் கூடிய ஆபத்துக்களை அளவிடுவதற்கான புதிய மதிப்பீட்டு முறை ஒன்றை ஆய்வாளர்கள் பயன்படுத்தியுள்ளார்கள். 

மதுபான பாவனை பாதக விளைவுகள் குறித்து இங்கு பிரிட்டிஷ் சமூகத்தில் பல விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால், இந்த அறிக்கை இந்த விவகாரத்தை மேலும் ஒரு படி முன்னே கொண்டு செல்கிறது. 

கொக்கெயின் மற்றும் ஹெரோயின் ஆகியவற்றினால் சமூகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பை விட மதுபானம் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று இந்த அறிக்கை கூறுகிறது.


சுகாதார ரீதியாகவும், குற்றவியல் ரீதியாகவும், பொருளாதர ரீதியாகவும் 16 வகையிலான பாதகத்தை ஏற்படுத்தும் 20 போதைப் பொருட்களை பட்டியலிட்டபோது, அதில் மது 72 புள்ளிகளையும், ஹெரோயின் 55 புள்ளிகளையும், முகரும் கொக்கெயின் 54 புள்ளிகளையும் பெற்றன. 

ஒரு தனி நபரின் சுகாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பட்டியலில் வது மது நான்காவது மோசமான மூலமாக இருக்கிறது. ஆனால் அந்த அறிக்கையின் முடிவு, மதுபானம் தான் பரந்துபட்ட சமூக மட்டத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதை பிரதிபலிக்கின்றது. 

இந்தத அறிக்கையை தயாரித்துள்ள முக்கியமானவர்களில் ஒருவர் பிரிட்டிஷ்
அரசாங்கத்தின் போதைப்பொருள் குறித்த முன்னாள் ஆலோசகரான பேராசிரியர் டேவிட் நட். போதைப்பொருள் குறித்த கொள்கைகள் பற்றிய வெளிப்படையான விமர்சனங்களை முன்வைத்ததற்காக ஒரு வருடத்துக்கு முன்னதாகவே பதவி நீக்கம் செய்யப்பட்டார். 

பிரிட்டனில் போதைப்பொருட்கள் குறித்த சட்டங்கள் காலாவதியானவை என்று அவர் கூறுகிறார். இந்த ஆய்வின் கண்டுபிடிப்புக்களை அரச கொள்கையாக்கத்தின் போது கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார். 

ஆனால், இந்தக் கருத்துடன் மாறுபடுபவர்கள் இந்த ஆய்வு ஒரு போலி விஞ்ஞானம் என்று விபரிக்கிறார்கள். அந்த போதைப் பொருட்களின் பட்டியலில் இருப்பவற்றில் மது மாத்திரமே சட்டபூர்வமான போதை மருந்து என்பதால், அது சமூகத்தில் பரந்துபட்ட அளவில் பெரும்பாதிப்பை ஏற்படுத்துகிறது என்ற முடிவில் எந்தவிதமான ஆச்சரியமும் கிடையாது என்று அவர்கள் கூறுகிறார்கள். 

லண்டனில் உள்ள மதுபானக் கடைகளில் மது அருந்துபவர்கள் கூட இந்த ஆய்வின் முடிவு குறித்து திருப்தி அடையவில்லை.

எதிர்காலத்தில் இந்த விடயம் குறித்து மேலும் விவாதங்கள் தொடர்வதற்கு தற்போதைய விவாதம் மிகவும் முக்கியமானது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பிரிட்டனை விட அரைவாசியளவுக்கே மது அருந்தப்படுகின்ற ஸ்வீடன் போன்ற நாடுகளிடம் இருந்து பிரிட்டன் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கிறன. 

அரசாங்கம் இந்த விடயத்தில் புதுமையான அணுகுமுறையை கைக்கொண்டால் தான் அது முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

Shocking CCTV Of Car Crashing

Shocking CCTV Of Car Crashing Into Clubbers


Fourteen people were taken to hospital after the stolen Saab saloon mounted the pavement and hit clubbers outside Dali bar in Rochdale.
Officers said it was lucky nobody was killed in the collision, which took place at 2.10am on Sunday, October 17.
Witnesses told Sky News that two men were asked to leave the bar because they were "behaving in a disorderly way".
It is understood they then drove the car at the doormen.
Police are still hunting suspect Lee Bradley, 26, and have searched more than 80 addresses since the incident.
Lee Bradley is suspect in Rochdale nightclub car crash
Lee Bradley and the Dali bar
They said anyone sheltering him would also be arrested.Detective Inspector Chris Walker, of Rochdale CID, added: "I want Bradley and anyone who knows where he might be to look at this CCTV footage and think long and hard about how serious this offence is."The footage clearly shows the driver of the car recklessly driving into a large group of people and, without exaggeration, it is fortunate no one was killed."We desperately need to speak to Bradley about this incident and will not rest until we find him.
CCTV pictures of the crash
Police said it was lucky nobody died in the crash

இந்திய ஹஜ் பயணிகள் 29 பேர் மரணம்

 சவுதி அரேபியாவில் முஸ்லிம்களின் புனித நகரமான மெக்காவுக்கு ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் இருந்து ஹஜ் பயணிகள் புனித யாத்திரை மேற்கொள்வார்கள்.

இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான ஹஜ் பயணிகள் மெக்காவிற்கு சென்று உள்ளனர்.

இவர்களில் 29 பேர் நோய் காரணமாக மரணம் அடைந்தனர். உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து சென்ற 8 பேர், பீகார் மாநிலத்தில் இருந்து 6 பேர்,

கேரள மாநிலத்தில் இருந்து 4 பேர், மேற்கு வங்காளத்தில் இருந்து 3 பேர், அசாம் மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் இருந்து தலா 2 பேர், ராஜஸ்தான், குஜராத், மராட்டிய மாநிலத்தில் இருந்து ஒருவர் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து சென்ற பயணி ஒருவரும் பலியாகி உள்ளனர்.

இந்துக்களை ஆர்.எஸ்.எஸ். ஏமாற்றிவிட்டது: இந்து மகாசபா குற்றசாற்று

இந்துக்களை ஆர்.எஸ்.எஸ். ஏமாற்றிவிட்டதாக இந்து மகாசபா குற்றம்சாற்றியுள்ளது.
J B Kshatriya
ஜலந்தரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்த இந்து மகாசபாவின் பேச்சாளர் ஜே.பி. ஷைத்ரியா, செல்வத்தை குவித்துக்கொள்வதற்காகவே அயோத்தியில் ராமர் கோவில் இடத்தை கைப்பற்ற ஆர்.எஸ்.எஸ். எண்ணுவதாக குற்றம்சாற்றினார்.

இந்துக்கள் தற்போது சந்தித்து வரும் பிரச்சனைகள், ஆர்.எஸ்.எஸ். ஆல் உருவாக்கப்பட்டதுதான் என்றும் குற்றம் சாற்றிய அவர், தொடக்கம் முதலே இந்துக்களின் நலம் விரும்பியாக ஆர்.எஸ்.எஸ் நடித்து மட்டுமே வந்ததாகவும், இந்துக்களுக்கு நியாயமாக அது நடந்துகொள்ளவில்லை என்றும், அவர்களை ஏமாற்றிவிட்டதாகவும் கூறினார்.

மனித மலத்தை மனிதர்கள் அள்ளும் அவலம்

மனித மலம் வெற்றுக் கையால் அள்ளப்படுகின்றது
மலத்தை மனிதர்கள் அள்ளும்
 
மனித மலத்தை மனிதர்கள் அள்ளும் அவலம் இந்தியாவில் சட்டரீதியாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக அரசு கூறினாலும், பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் இன்னமும் இந்த பணியில் ஈடுபடுத்தப்படுவதாக கூறும் தலித் சமூகத்தினர் அதை முற்றாக ஒழிக்கக்கோரி புது தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
 
இந்தியா முழுவதிலிருந்தும் இந்திய தலைநகர் தில்லியில் திரண்ட ஆயிரக்கணக்கான மலம் அள்ளும் துப்புரவுத் தொழிலாளர்கள், தங்களை இந்த இழிவான பணியிலிருந்து மீட்குமாறு இந்திய நடுவணரசுக்கு கோரிக்கைகளை முன்வைத்தனர். 

இந்தியாவில் மனித கழிவை மனிதர்கள் அள்ளும் நடைமுறை தேசிய அளவில் 1993ம் ஆண்டிலேயே சட்டரீதியாக ஒழிக்கப்பட்டாலும், இன்னும் பல மாநிலங்களில் இது தொடர்வதாக கூறுகிறார் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திய தேசிய துப்புரவுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவரான, பெசவாடா வில்சன். இந்த இழிவை சுமப்பவர்கள் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சமூகத்தின் மற்ற பகுதியினர் மத்தியில் இதை ஒழிப்பதில் அதிக அக்கறை இல்லை என்கிறார் அவர். 

எனவே, இந்திய அரசால் சட்டவிரோதமாக்கப்பட்ட மனித கழிவை மனிதர்களே அகற்றும் அவலத்தை முற்றிலுமாக ஒழிக்க அரசு அதிகபட்ச அக்கறை காட்டி குறிப்பிட்ட கால எல்லைக்குள் இதை ஒழித்து இதில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நடைமுறைகளை செயற்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார். 

சட்ட ரீதியாக தடை செய்யப்பட்ட இந்த அவலம், இந்தியாவில் பரவலாக தொடர்வதை ஒப்புக்கொள்கிறார் இந்திய நடுவணரசின் ஓய்வு பெற்ற அமைச்சரவைச் செயலர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன். பழமையில் ஊறிப்போன இந்திய சமூகத்தில் மாற்றங்கள் மிகவும் தாமதமாகவே ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.





அயோத்தி : இராமர் பிறந்த பூமியா? சீதை ம‌ரித்த பூமியா?

உத்தரபிரதேச மாநிலம் ஃபைசாபாத் மாவட்டத்திலுள்ள அயோத்தியில், சங் பரிவார் அமைப்புகளால் இடித்துத் தள்ளப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கையை ஏற்றுக் கொண்டு, பாபர் மசூதி - இராமர் ஜென்ம பூமி வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்ட நிலையில், அங்கு இராமர் பிறந்திருக்க முடியுமா? அல்லது அங்கு இராமருக்கு கோயில் இருந்திருக்க முடியுமா? என்பது குறித்து ரகு வம்சத்தை எடுத்துக் காட்டி ஒரு எதிர் விளக்கத்தை தருகிறார் சத்தியமங்கலம் என். நாகராஜன்.
திரு. எஸ்.என், நாகராஜன்
84 வயதாகும் திரு. எஸ்.என், நாகராஜன் பொதுவுடைமை இயக்கதில் நீண்ட காலம் பணியாற்றியவர். கீழை மார்க்சிய சிந்தையாளர். அதுமட்டுமின்றி, ஆழ்வார்களின் தென் கலை வைணவப் பின்னணியும், அதில் மிகுந்த ஈடுபாடும் கொண்டவர். இன்றைக்கு விவசாயத்தையும், சுற்றுச் சூழலையும் காப்பாற்ற தொடர்ந்து பணியாற்றி வருபவர். நமது நாட்டின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் அறிந்த ஒரு சீரிய சிந்தனையாளர்.

இவர் அயோத்தியில் இராமர் பிறந்திருக்க முடியாது என்று வாதிடுகிறார். அவருடைய வாதம் வருமாறு:

“அயோத்தி அரசன் தசரதனின் மனைவியான கோசலை, குசால இராஜ்யத்தின் இளவரசியாவார். இவரை தசரதன் கடத்திச் சென்றோ அல்லது கடி மனமோ (காந்தர்வ விவாஹம்) புரியவில்லை, முறைப்படியே மணம் புரிந்துள்ளார். எனவே, தொன்று தொட்டு இந்நாட்டில் நிலவிவரும் மரபுப் படி, நிறைமாத கர்பினியான ஒரு பெண், தனது தாய் வீட்டிற்குச் சென்று பிள்ளை பெறுவதைப்போல, தசரதனின் மனைவியான கோசலையும் தனது தாய் வீடான (இராஜ்யமான) குசால மன்னன் அரண்மனைக்குச் சென்று அங்குதான் இராமனை பிரசவித்திருக்க முடியும்.

எனவே, அயோத்தியில்தான் இராமன் பிறந்தார் என்பதற்கு அடிப்படையேதுமில்லை. எந்தப் புராணத்திலும் அதற்கான ஆதாரமும் இல்லை.

இரண்டாவதாக, அயோத்தி புண்ணிய பூமியா? என்ற கேள்வியும் உள்ளது. இராவணனின் பிடியில் இருந்து சீதையை காப்பாற்றி வந்த இராமன், அவளுடைய கற்பின் தூய்மையை நிரூபிக்க அக்னி பிரவேசம் செய்ய முற்பட்டபோது, இராமன் தடுக்கவில்லை. சீதை அக்னி பிரவேசத்தை நிறைவேற்றிய இடம் அயோத்தியாகும். இந்த விவரம் வால்மீகி இராமயணத்தில் உள்ளது. அக்னிப் பிரவேசத்தின் போது சீதையை அவளுடைய தாயான பூமிதேவி தன்னுள் எடுத்துக் கொண்டாள் என்று அனைத்துப் புராணங்களும் கூறுகின்றன.

இதில் குறிப்பிடத்தக்கது ரகு வம்சம். காளிதாசர் எழுதிய ரகு வம்சத்தில் அயோத்தி ஒரு புனித தலமாக சித்தரிக்கப்படவில்லை. அதை சீதை மறித்த பூமியாகவே காட்டுகிறார் காளிதாசர். ரகு வம்சத்தில் உத்தர காண்டம் மிக முக்கியமானது. அதில் இந்த விவரம் உள்ளது.

தனது மனைவி சீதை மீது இராமன் சந்தேகம் கொண்ட நிலையிலேயே, சீதையை தனது ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்கிறார் வால்மீகி. இராமனின் பிள்ளைகளான லவ, குசா இருவரும் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில்தான் பிறந்தனர். அங்குதான் வளர்ந்தும் வந்தனர். அவர்கள் 6 வயதைக் கடந்த நிலையில் அவர்களை இலக்குவன் அயோத்திக்கு அழைத்து வருகிறார். அப்போது வால்மீகியும் உடன் வருகிறார்.

அப்போது லவ, குசா இருவரும் யாருக்குப் பிறந்தவர்களோ என்ற சந்தேகத்தை ஒருவன் எழுப்ப (வண்ணான் என்று கூறுகின்றனர்), சீதை அக்னி பிரவேசம் செய்ய முற்படுகிறார். அதை இராமன் தடுக்கவில்லை. சீதை அக்னி பிரவேசம் செய்த நிலையில், அவளுடைய தாயான பூமிதேவி சீதையை தன்னோடு அழைத்துக் கொண்டு பூமிக்குள் சென்று விடுகிறாள்.

தங்களது தாய் மறித்த இடத்தில் நாங்கள் வாழ் மாட்டோம் என்று கூறிவிட்டு, லவ, குசா இருவரும் அயோத்தியை விட்டு வெளியேறுகின்றனர். அவர்களோடு அயோத்தி மக்களும் வெளியேறி விடுகின்றனர். அத்துடன் அயோத்தியே காலியாகிவிடுகிறது.

அமெரிக்கா தாக்கப்படும்! இஸ்ரேல் உளவாளி பரபரப்பு தகவல் - டிச. 28-2009

 27-10-2010_ல் தற்போது நடந்த அமெரிக்காவுக்கான விமானத்தில் வெடிப்பொருட்கள் இருந்ததை 

கடந்த 28-12-2009_ல் சொன்ன இஸ்ரேலின் உளவாளியின் பரபரப்பு தகவல்


டெல் அவிவ், டிச. 28-2009 ஜுவல் அவிவ் இஸ்ரேல் பிரதமர் கோல்டா மெய்ராவின் மெய்க்காப் பாளராக இருந்தவர்.

முனிச்சில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற சமயம் பாலஸ்தீன பிணைக் கைதிகளால் இஸ்ரேலிய தடகள வீரர்கள் கொல்லப்பட்டனர்.அந்த சம்பவத்தை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக கோல்டா மெய்ராவால் நியமிக்கப் பட்டவர். தடகள வீரர் களின் படுகொலைக்கு சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனையையும் வாங்கித் தந்தவர். இந்தப் படுகொலைக்கான கண்டனத்தையும், விசாரணையையும் இஸ்ரேல் தன் நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொண்டது.

ஜுவல் அவிவ் லண்டன் ரயில்வே சுரங்கப்பாதை வெடி குண்டு சம்பவத்தை முன் கூட்டியே கணித்தார். லண்டன் மாநகர போலீசார் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தி ருந்தபோதும் லண்டன் சுரங்க வெடிகுண்டு சம்பவம் நடந்தது. ஜுவல் அவிவ் முன்னரே கண்டுபிடித்து கூறியபோது கேலியும், கிண்டலும் செய்யதார்களாம்.

ஜுவல், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளிலிருந்து இரட்டை கோபுரம் தாக்கப்படலாம் என்ற செய்தியை அமெரிக்க (புஷ்) அராசங்கத்திடம் கொடுத்தார்.ஆனால் இந்தக் கணிப்பையொட்டி அமெரிக்க அரசாங்கம் பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை செய்யவில்லை. 
இதன் விளைவாக இரட்டை கோபுரம் ஒரு மாதத்திற்கு பிறகு தகர்க்கப்பட்டது.ஜுவல் தனது அறிக்கையில் தீவிரவாதிகள் விமானம் அல்லது குண்டுகளின் உதவியுடன் அமெரிக்காவின் அதிக முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களையோ அல்லது நினைவுச் சின்னங்களையோ தாக்கலாம் என விவரமாக கூறியுள்ளார். அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்ட மாதிரியாகவே இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது. இந்த சம்பவம் நடைபெற்றதிலிருந்து தனது நாட்டு பாதுகாப்புக்காக ஓரு தொகையை வாடகையாக பாதுகாப்பு ஆலோசனை நிறுவனத்திற்கு அமெரிக்கா வழங்கி வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் மீது தீவிரவாதிகளால் மற்றுமொரு தாக்குதல் அடுத்த சில மாதங்களில் நடத்த வாய்ப்பு இருப்பதாக ஜுவல் அவிவ் கூறியுள்ளார்.2001 விமான கடத்தலையே மக்கள் மறக்க முடியாத நிலையில், தீவிரவாதிகள் மீண்டும் ஒரு விமான கடத்தலை நடத்த நினைக்கமாட்டார்கள். 

அதாவது வெடிகுண்டுகளில் உலோகம் இருக்கும் என நம்புகிறோம். ஆனால் தீவிரவாதிகள் அதிக திறன் வாய்ந்த பிளாஸ்டிக் தொழில் நுட்பத்துடன் கூடிய வெடிகுண்டுகளை பயன்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Proof Here http://pledgeamerica.org/blog/2009/10/juval-avivisraeli-agent-speaks-out
 அமெரிக்கா தாக்கப்படும்! இஸ்ரேல் உளவாளி பரபரப்பு தகவல்

Comments : ஆஹா எவ்வளவு அருமையாக பாம் வைக்கிறத முன்னாடியே சொல்லிருக்காங்க... Sorry, Sorry எவ்வளவு அருமையாக யாரோ பாம் வைக்கப்பொறத முன்னாடியே சொல்லிருக்காங்க... Realy Great yaa

அமெரிக்காவுக்கான விமானத்தில் வெடிப்பொருட்கள்


அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட பார்சல் ஒன்றை துபாயில் வழிமறித்து சோதித்ததில் அதில் வெடிப்பொருட்கள் இருந்ததாகவும், இதில் அல் கையிதா ஈடுப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் தெரிவதாக துபாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதே போன்று பிரிட்டனின் ஈஸ்ட் மிட்லேண்ட்ஸ் விமான நிலையத்திலும் பார்சல் ஒன்று வெடிப்பொருட்களுடன் பிடிக்கப்பட்டுள்ளது.

துபாயில் பிடிக்கப்பட்டுள்ள பார்சலில் பி.ஈ.டீ.என் என்ற வெடிமருந்து இருந்துள்ளது. இதே வெடிமருந்து தான் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டெட்ராய்ட்க்கு சென்ற விமானம் ஒன்றில் வெடிக்க வைக்க முயற்சிக்கப்பட்டது. 

வெள்ளிகிழமையன்று துபாய் மற்றும் பிரிட்டனில் பிடிக்கப்பட்ட இரு பார்சல்களுமே யெமனில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற சரக்கு விமானத்தில் இருந்தன. இந்த பொருட்களுக்கும் அரேபிய பகுதியில் இயங்கி வரும் அல் கையிதாவுக்கும் தொடர்பு இருக்கும் என புலனாய்வு அதிகாரிகள் எண்ணுகின்றனர். 


இந்த இரு பார்சல்களுமே சிகாகோ பகுதியில் இருக்கும் யூதர்களின் வழிப்பாட்டு மையங்களுக்கு முகவரியிட்டு அனுப்பப்பட்டுள்ளன.

யூ.பி.எஸ். பெடெக்ஸ் சரக்கு விமானங்களில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பார்சல்களை தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விமான நிலையங்களில் யெமனில் இருந்து வரும் பொருட்களை சோதித்து வருகின்றனர். 

இதற்கிடையே பிரிட்டனில் பிடிப்பட்ட பொருள் தொடர்பாக கருத்து தெரிவித்த பிரிட்டனின் உள்துறை செயலரான தெரஸா மே, இது வெடிக்க வைக்க கூடிய உபகரணம் தானா என்று நிபுணர்கள் ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார். 

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தாங்கள் பல்வேறு தகவல்களை ஆராய்ந்து வருவதாகவும், யெமனில் இருந்து தான் பார்சல்கள் வந்துள்ளது என்பது தங்களுக்கு தெரியும் என்றார். அதே போன்று அரபிய தீபகற்ப பகுதியில் இயங்கி வரும் அல் கையிதா, எம்முடைய நாட்டில், எம்முடைய குடிமக்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடுவது தங்களுக்கு தெரியும் என்றும் கூறினார். 

இந்த பார்சல்கள் பிடிப்பட்டதற்கு சவுதி அரேபியா கொடுத்த தகவலே காரணம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. பிரிட்டனின் ‘டெய்லி டெலிகிராப்’ செய்தித்தாள் வெளியிட்டுள்ள செய்தியில் யெமனுக்கு பொறுப்பான எம்.ஐ.6 அதிகாரிக்கு இந்த பார்சல்கள் குறித்த தகவல்கள் வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, யெமன் அதிகாரிகள் இருபதுக்கும் அதிகமான சந்தேகத்துக்கு இடமான பார்சல்களை பறிமுதல் செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். 

யெமனில் இருந்து அனுப்பப்படும் ஆட்கள் கூட வராத பார்சல்களை தனது வான்வெளியில் அனுமதிக்க போவதில்லை என பிரிட்டன் அறிவித்துள்ளது.

அமெரிக்க விமானத்தில் குண்டுகள் கண்டுபிடிப்பு

ஏமனிலிருந்து அமெரிக்கா செல்ல இருந்த விமானத்தில் வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

ஏமன் நாட்டில் இருந்து புறப்பட்டு பிரிட்டனில் தரையிறங்கி, பின்னர் அமெரிக்காவின் சிக்காகோ நகருக்குச் செல்லவிருந்த விமானத்தில், தொலைதூரத்தில் இருந்து இயக்கவல்ல குண்டு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அமெரிக்காவின் பிரபலமான, மற்றும் சர்வதேச அளவில் சேவையாற்றும் யு.பி.எஸ் பார்சல் சர்வீஸ் விமானத்திலேயே இக்குண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பிரிட்டனின் மிட்லன்ஸ் பகுதியில் தரையிறங்கிய விமானத்தில், இக்குண்டுகள் இருப்பதைக் கண்டறிந்த அதிகாரிகள், உடனே குண்டைச் செயலிழக்கச் செய்யும் நிபுணர்களை வரவழைத்து அக்குண்டுகளை செயலிழக்கச் செய்தனர்.

இதுபோன்ற மற்றுமொரு குண்டு துபாயில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
துபாயில் பிடிப்பட்ட பார்சல்
பிரிட்டன் வந்த அமெரிக்க விமானத்தை, பாதுகாப்புப் பிரிவினர் வழக்கம்போலச் சோதனை செய்ததபோது தற்செயலாக இது கண்டுபிடிக்கப்பட்டது.

வேலைக்கு அழைக்கும் மோசடி இ மெயில்கள்!

விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் எந்த அளவிற்கு வளர்கிறதோ அதற்கேற்ப மோசடி செய்பவர்களும் தங்களது மோசடி முறைகளை மாற்றிக்கொள்கிறார்கள்.

அந்த வகையான மோசடிகளில் ஒன்றுதான் வேலை தருவதாக கூறி வரும் மோசடி இ மெயில்கள்.

வங்கியிலிருந்து கேட்பதாக கூறி வங்கி கணக்கு எண் மற்றும் ரகசிய எண்ணை கேட்பது, "உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது; அதனை அனுப்பி வைப்பதற்கான கூரியர் செலவு மற்றும் டாக்குமெண்ட் கட்டணமாக இவ்வளவு தொகையை கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் செலுத்துங்கள்..." என்பதுமாதிரியான மெயில்களை அனுப்பிக்கொண்டிருந்தவர்கள், அவை மோசடியானது என்பது தெரியவந்துவிட்டதால், தற்போது தங்களது யுக்தியை மாற்றிக்கொண்டு, வேலை தேடுபவர்களை குறிவைக்கிறார்கள்.

இதுநாள் வரை பேருந்துகளிலும், ரயில்களிலும் பிட் நோட்டீஸ் அடித்து ஒட்டி, அதில் " பிரபல அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களுக்கு படித்த மற்றும் படிக்காத ஆட்கள் தேவை. மாதச் சம்பளம் 10,000 முதல்..." என்று வாயை பிளக்க வைக்கும் தொகையை குறிப்பிட்டு, முகவரி எதையும் தெரிவிக்காமல், செல்போன் எண்ணை மட்டும் தெரிவித்திருப்பார்கள்.

அதைப்பார்த்து ஏமாந்து தொடர்புகொள்பவர்களிடம், ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி, 10,000 சம்பளத்திற்கு 10,000 டெபாசிட் கட்ட வேண்டும், 20,000 என்றால் அதற்கேற்ற தொகை என்று கூறி, லம்பாக ஒரு தொகையை கறந்துகொண்டு கம்பி நீட்டி விடுவார்கள்.

இத்தகைய நபர்கள்தான் இப்பொழுது புது அவதாரம் எடுத்து, தங்களது மோசடிகளை அரங்கேற்ற தொடங்கியுள்ளனர்.

ஏதோ ஒரு வகையில், எப்படியோ இ மெயில் முகவரிகளை திரட்டிக்கொள்ளும் இத்தகைய மோசடி பேர் வழிகள், பிரபலமான கம்பெனி பெயரில் , ஏகப்பட்ட பதவிகளின் பெயர்களை குறிப்பிட்டு, வேலைக்கு ஆட்கள் தேவை என்றும், உங்களுக்கு ஏற்ற வேலைக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதி சான்று, வேலை அனுபவம் முகவரி அத்தாட்சி, சம்பள பட்டியல் போன்றவற்றை அனுப்புங்கள் என்று கூறி ஒரு போலியான தனிநபர் மெயில் ஐடி கொடுத்திருப்பார்கள்.

கூடவே மிக முக்கியமாக, வேலைக்கான நேர்முக தேர்வுக்கு வருவதற்கு செக்யூரிட்டி டெபாசிட் தொகை கட்ட வேண்டும் என்று கூறி ஒரு தொகை குறிப்பிடப்பட்டிருக்கும். அத்துடன் அதை செலுத்துவதற்கான வங்கி கணக்கும் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதை உண்மையென நம்பி பணம் போட்டால் அவ்வளவுதான்.பணத்தை எடுத்துக்கொண்டு, அந்த வங்கிக்கணக்கையே "குளோஸ்" செய்துவிட்டு கம்பி நீட்டிவிடுவார்கள்.

பொதுவாகவே இத்தகைய மெயில்கள் மோசடியானவை என்பதை, அதில் காணப்படும் சில பொதுவான ஏமாற்று வேலைகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

முதலில் பிரபல கம்பெனி என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக, குறிப்பிட்ட பிரபல நிறுவனத்தின் பெயரோடு துணை வார்த்தைகளையும் சேர்த்திருப்பார்கள்.

கனவைப் பதியலாம்

மனித மூளை
கனவுகளை மின்னியல் ரீதியாக பதிவு செய்து அதற்கு கற்பிதம் கூற தாம் திட்டமிடுவதாக ஒரு அமெரிக்க ஆய்வாளர் கூறியுள்ளார்.
கனவுகள் ஏன் ஏற்படுகின்றன எப்படி ஏற்படுகின்றன என்பதைக் கண்டறியப் பயன்படக் கூடிய மூளையின் உயர் மட்ட செயற்பாடுகளை பதிவு செய்வதற்கான முறைமை ஒன்றை தாம் கண்டுபிடித்துள்ளதாக Journal Nature scientists என்னும் சஞ்சிகையில் வெளியான கட்டுரையில் அவர் தெரிவித்துள்ளார். 

கனவுகளை பதிவு செய்யக் கூடிய ஒரு இயந்திரத்தை உருவாக்குவதற்கான நோக்கம் என்பது ஒரு அலாதியான விசயந்தான். ஆனால், கலிபோர்னியாவில் உள்ள ஆய்வாளர் குழு ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவுக்காவது அது எவ்வாறு சாத்தியம் என்பது குறித்து விளக்குகிறது.


ஒருவரது முளையின் கலங்கள் அல்லது நியூரோன்கள் ஒரு விடயத்துடன் அல்லது ஒரு கருத்தியலுடன் தொடர்புபட்டதாக இருப்பதாக அந்த ஆய்வாளர்களின் ஒரு ஆய்வு கூறுகிறது.

உதாரணமாக பரிசோதனைக்கு உட்படும் ஒரு தொண்டர், நடிகை மர்லின் மன்றோவை நினைக்கும் போது அந்த நினைப்புடன் தொடர்புடைய அவருடைய மூளையில் இருக்கும் நியோரோன் பற்றிக்கொண்டு ஜொலிக்கும்.

பரிசோதனைக்கு வந்த தொண்டர்களுக்கு தொடர்ச்சியான பல படங்களை காண்பித்தபோது, பல தரப்பட்ட விடயங்கள், பொருட்கள் மற்றும் கருத்தியலுடன் சம்பந்தப்பட்ட நியூரோன்களை ஆய்வாளர்களால் அடையாளம் காண முடிந்தது.

தூங்கும் தொண்டர்களின் மூளையின் அலைகளை புரிந்துகொள்வதும், அதில் இருந்து அவர்கள் காணுகின்ற கனவுகளை புரிந்து கொள்ள விழைவது என்பவைதான் ஆய்வாளர்கள் எடுக்கப்போகின்ற அடுத்த முயற்சியாகும்.

ஆர்.எஸ்.எஸ்.சை கண்காணிக்க வேண்டும்: காங்கிரஸ்





 ஆஜ்மீர் குண்டுவெடிப்பு விசாரணையில் ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு காவ‌ல்துறை கண்டுபிடித்த தகவல்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

ஆஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடைசெய்ய பொருத்தமானது என காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் மணீஷ் திவாரி தெரிவித்தார்.

எனினும் ஆர்எஸ்எஸ் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது அவசியம் அல்லது அவசியமில்லை என்பதை அரசுதான் தீர்மானிக்க வேண்டும் எ‌ன்று ‌திவா‌ரி கூ‌றினா‌ர்.

10 ஆண்டுகளாக பட்டினிப் போராட்டம் நடத்தும் இரும்புப் பெண்மணி

மணிப்பூரைசசேர்ந்தவரஇரோமஷர்மிளஎன்பெண்மணி. ஆயுதப்படையினரசிறப்பஅதிகாரசசட்டத்தநீக்கக்கோரி 10 ஆண்டுகளாதனி நபராநின்றஉண்ணாநிலைபபோராட்டமநடத்தி வருகிறார்.

2000 ஆமஆண்டநவம்பர் 2ஆமதேதி மணிப்பூரமாநிலமமல்லோமஎன்இடத்திலஅஸாமதுப்பாக்கிபபடையினரநடத்திகாட்டுமிராண்டிததனமான 'என்கவுண்டரில்' ஒரநடுவயதபெண்மணி உட்பட 10 அப்பாவி மக்களசுட்டுககொல்லப்பட்டனர்.

அன்றைதினமஷர்மிலதனதஉண்ணாநிலைபபோராட்டத்தைததுவங்கினார், இரண்டநாட்களுக்குபபிறகஅவரதற்கொலமுயற்சி வழக்கிலகைதசெய்யப்பட்டார்.

ஆனாலஇவரஓராண்டசிறையிலவைக்கசசட்டமஉதவியது. ஓவ்வொரஆண்டமுடிவிலுமஇவரசிறையிலிருந்தவிடுவிக்கப்படுவார். ஆனாலஇவரவீட்டிற்குசசென்றஉற்றாரஉறவினர்களைபபார்ப்பதில்லை, ஆனாலதன்னுடைகோரிக்கையவலியுறுத்தி மீண்டுமபட்டினிப்போராட்டமசெய்வாரமீண்டுமகைதமீண்டுமபோராட்டமஎன்றஇவரதவாழ்வஇருந்தவந்துள்ளது,.

இவருக்காகவே.என். மருத்துவமனையிலஒரஅறசிறையாமாற்றப்பட்டுள்ளது . இந்தியாவில்தானஇவருக்ககைதவரவேற்பு. ஆனாலதெனகொரியஇவருக்கஅவர்களநாட்டினஉயர்ந்மனிஉரிமவிருதைககொடுத்தகவுரவித்தது. சமீபத்திலஇவருக்கரவீந்திரநாததாகூரவிருதும், ூ.51 லட்சமரொக்கமுமஅளிக்கப்பட்டது. ஆனாலஇவரபணத்திற்காபோராட்டமநடத்துமசாதாரநபரஅல்ல.. எவ்வளவபேரவலியுறுத்தியுமஇவரதனதபட்டினிபபோராட்டத்தைககைவிடுவதாயில்லை.

இவரதபோராட்எதிரொலியால் 2004ஆமஆண்டஆகஸ்ட் 12ஆமதேதி மணிப்பூரஅரசு 7 சட்டமன்றததொகுதிகளிலிருந்தஆயுதப்படசிறப்பஅதிகாரசசட்டத்தரத்தசெய்தது. ஆனாலஇதற்கெல்லாமஇவரமசியவில்லை. அதாவதஇந்அடாவடிசசட்டமமுற்றிலுமஒழிக்கப்படவேண்டுமஅதவரஎனபோராட்டமஓயாதஎன்றஇவரபட்டினிப்போராட்டத்தைததொடர்ந்தவருகிறார்.

ஆனாலஇந்தசசட்டத்தவாபஸபெற்றாலமீண்டுமபோராளிகளஅல்லதபிரிவினைவாதிகளஓங்குமஎன்றமறுத்தவருகிறது.

இவரபட்டினிப்போராட்டம் 10-வதஆண்டைததொட்டுவிட்டதால், ஜஸ்டபீஸஃபவுண்டேஷனஎன்அமைப்பஇவரகௌரவிக்முடிவசெய்துள்ளது.

நவம்பரமுதலவாரத்திலகாங்கிரஸதலைவரசோனியகாந்தி மணிப்பூரசெல்கிறார். அப்போதஇவரஷர்மிலாவைசசந்திக்முயற்சி செய்கிறாரஎன்பதைபபொறுத்திருந்தபார்ப்போம்.

அரசியல்வாதிகளின், போலிகளினபோலி உண்ணாநிலைபபோராட்டத்தைபபார்த்தபார்த்தமனமவெதும்புமஉண்மையாகுடிமகன்களுக்கஷர்மிலாவினபோராட்டமஒரதைரியத்தஅளிக்குமஎன்றநம்பலாம்.

ஒரமாநிலத்தினஅடக்குமுறையஎதிர்த்தஒரதனி நபரஅதுவுமஒரபெண்மணி ஒற்றையாளாநின்றஅறப்போராட்டமநடத்துவதகாந்தி தேசமாஇந்தியாவுக்கபெருமசேர்க்குமவிஷயமஎன்பதஒரபுறமிருக்க,

காந்தி எதிர்த்ததஅன்னிசக்திகளை, ஆனாலஇன்றஇந்இரும்புபபெண்மணி எதிர்ப்பதநமஉள்நாட்டஆதிக்கசசக்திகளஎன்பதநம்மசிந்திக்கததூண்டுமஒரவிஷயமாகபபார்க்அறிவுறுத்துகிறது.

இந்தோனேசியாவில் சுனாமிக்கு 110 பேர் பலி



ஜகார்த்தா: இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், கடலில் 10 அடி உயரத்துக்கு சுனாமி உருவானது. இதில் 110 பேர் பலியாயினர்; பெண்கள், குழந்தைகள் என 380 பேர் காணாமல் போய்விட்டனர். இந்தோனேசியாவின், மேற்கு பகுதியில், சுமத்ரா தீவின் அருகிலுள்ள மென்டாவாய் தீவுக்கருகில் நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், மேற்கு சுமத்ரா தீவிலுள்ள பல்வேறு மாகாணங்களில் உணரப்பட்டது.

நிலநடுக்கத்தால், கடலில் 10 அடி உயரத்துக்கு சிறிய அளவில் சுனாமி ஏற்பட்டது. மென்டாவாய் தீவுகளில் 20 கி.மீ., தூரத்துக்கு சுனாமியால் ஏற்பட்ட அலைகள் புகுந்தன. இந்தச் சுனாமியில் சிக்கி மென்டாவாய் தீவுகளில் 150 வீடுகள் சேதம் அடைந்தன. மென்டாவாய் தீவுகளில் தெற்கு பகாய் என்ற இடத்தில் உள்ள பெலு மொங்கா உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 380 பேர், வெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போய்விட்டனர். மலகோபா என்ற கிராமத்தில் 80 சதவீத வீடுகள் அழிந்து விட்டன. உணவுத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தீவுகளின் அருகில், படகில் சுற்றுலா மேற்கொண்டிருந்த 10 ஆஸ்திரேலியர்கள் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

பிரபாகரன் மீதான ராஜிவ் கொலை வழக்கு தள்ளுபடி

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்த புலித் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவு தலைவர் பொட்டுஅம்மான் ஆகியோரது மரணம் குறித்து இலங்கை அதிகாரிகள் அளித்த தகவல்களில் திருப்தியடைவதாக சி.பி.ஐ., தெரிவித்தது. இதையடுத்து, அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்து, வழக்கை கைவிடுவதாக, "தடா' சிறப்பு கோர்ட் அறிவித்துள்ளது. 
இந்திய சட்டப்படி, குற்றம் சாட்டப்பட்டவர் இறந்துவிட்டால், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தள்ளுபடி செய்யப்படும். அந்த அடிப்படையில், பிரபாகரன் மரணத்தை உறுதிப்படுத்தும் வகையில், அவரது மரணச் சான்றிதழை வழங்கும்படி, இலங்கை அரசை இந்தியா கேட்டுக்கொண்டது. ஆனால், அதுபோல எந்த சான்றிதழும் வழங்கப்பட்டதாக தகவல் இல்லை.


 "தடா' சிறப்பு நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி, "பிரபாகரனும், பொட்டு அம்மானும் இறந்துவிட்டதாக, புலன் விசாரணை ஏஜன்சியால் நிரூபிக்க இயலும் என இக்கோர்ட் நம்புகிறது. அதன் அடிப்படையில், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்து, வழக்கை கைவிட உத்தரவிடப்படுகிறது' என, உத்தரவிட்டுள்ளார். மேலும், தொடர்ந்து விசாரணை நடத்தி, விசாரணையின் முன்னேற்றம் குறித்து அடிக்கடி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மரணமடைந்து விட்டதாக, இந்திய அரசு முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

லேப்-டாப் திருடனை விரட்டி பிடித்த மாற்றுத் திறனாளி

மதுரையில் லேப்-டாப் திருடி, தலைமறைவானவரை நான்கு மாதங்களுக்குப் பின், விரட்டிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தார், மாற்றுத் திறனாளி கோபிகண்ணன்.


போலியோ பாதித்த மாற்றுத் திறனாளியான இவர், மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்தவர். மாநில, தேசிய, சர்வதேச அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்று 50க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றவர். இதற்காக, அரசு 2003ல் தொகுப்பூதியத்தில் பணி வழங்கியது. மதுரை கலெக்டர் அலுவலக பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஷாப்பிங் காம்பிளக்சில் பாதுகாப்பு பணியில் உள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன், இங்குள்ள கம்ப்யூட்டர் சென்டர் ஒன்றில் லேப்-டாப் திருடு போனது. அதை திருடியவரை கோபிகண்ணன் பிடிப்பதற்குள் தப்பி விட்டார்.

இந்நிலையில், நேற்று காலை அதே நபர் அங்கு நடமாடினார். ஏற்கனவே, தப்பிய நபரைப் போலவே இருந்ததால், அவரை விசாரித்தார் கோபி கண்ணன். அவர் முரணான பதில் கூறவே, அவரை மீண்டும் பிடிக்க முயன்றார். சுதாகரித்த அந்த நபர், அவரை தள்ளிவிட்டு ஓடினார்.இதை எதிர்பாராத கோபிகண்ணன், தனது டூவீலரில் மதிச்சியம் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று, இரு போலீசாரை அழைத்துக் கொண்டு திருடனை விரட்டினார். அந்த நபர் ஓட்டம் பிடிக்கவே, போலீசார் விரட்டிப் பிடித்தனர். விசாரணையில், அவர் அனுப்பானடியைச் சேர்ந்த சந்தனகுமார் (29) என தெரிந்தது. தல்லாகுளம் போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்

ஹேட்லி குறித்த தகவல்: இந்தியாவுக்கு ஏமாற்றம்


புதுதில்லி, அக்.28- இந்திய நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள டேவிட் ஹேட்லி குறித்த தகவல்களை பெறுவதில் இந்தியாவுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளை கூறியுள்ளார்.

எனினும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் டிமோதி ஜெ ரோமர், "மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு முந்தைய காலத்தில் இருந்தே தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பாக இந்தியாவுக்கு தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் தகவல்களை அளித்து வந்தோம். மும்பை தாக்குதலுக்கு பின்னரும் தொடர்ந்து தகவல்களை வழங்கி வருகிறோம்." என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், ஹேட்லி தொடர்பாக பயனுள்ள தகவல்களை பெறுவதில் இந்திய புலனாய்வு ஏஜென்சிகளுக்கு ஏமாற்றம்தான் ஏற்பட்டுள்ளது என்று ஜி.கே. பிள்ளை கூறியுள்ளார்.

இராக்கிய அதிகாரிகளின் சித்ரவதைகள்

விக்கிலீக்ஸ் இணையதளம் கிட்டதட்ட 4 லட்சம் அமெரிக்க இராணுவ ரகசிய பதிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த பதிவுகள் மூலம் இராக்கிய அதிகாரிகளின் சித்ரவதைகள் பற்றி தெரிந்து இருந்தும் அமெரிக்க இராணுவத்தினர் அதனை கண்டுகொள்ளவில்லை என அறிய வருகிறது. அத்தோடு அமெரிக்க இராணுவத்தின் சோதனை சாவடிகளில் பல நூற்றுக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பதிவுகள் கூறுகின்றன.
மேலும் பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்த ஆவணங்கள் கைவசம் இருந்தும், அவ்வாறு எவ்வித ஆவணமும் இல்லை என அமெரிக்கா முன்னர் மறுத்து வந்ததும் தெரிய வருகிறது. இராக் மீது போர் தொடுத்த பின்னர் பலியானவர்களின் எண்ணிக்கையானது 1,09,000 என்றும், அவற்றில் 66,081 பேர் பொதுமக்கள் என்றும் இப்போது அறிய வருகிறது. 

ஆனால் இந்த தகவலை எல்லாம் நிராகரித்துள்ள அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம், இதெல்லாம் மேலோட்டமான தகவல்கள் என கூறியுள்ளது. மேலும் சித்ரவதை மற்றும் முறைகேடான நடவடிக்கை இருந்தால், அவை குறித்து புகார் செய்தால் நடவடிக்கை எடுப்பதை தாங்கள் கோட்பாடாகவே வைத்திருப்பதாகவும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

லண்டனில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனரான ஜூலியன் அஸாங்கே, ஒவ்வொரு நாளும் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான இந்த பதிவுகள், இந்த போரால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை பிரதிபலிப்பாக கூறினார். மேலும் தினம் தினம் ஒன்று அல்லது இரண்டு பேர் கொல்லப்படும் சின்ன சின்ன சம்பவங்களின் ஒட்டு மொத்தமான எண்ணிக்கை தான் இது என்றும் கூறினார். 

இந்த பதிவுகள், தினந்தோறும் தொடர்ச்சியாக நடைபெற்று வரும், சின்ன தாக்குதல்கள் என்று வர்ணிக்கப்படும் சம்பவங்களால் ஏற்படும் பாதிப்புகளை காட்டுவதாக விக்கிலீக்ஸுடன் இணைந்து பணி புரியும் ‘இராக் பாடி கவுண்ட்’ அமைப்பின் ஜான் ஸ்லபோடா கூறினார்.
அமெரிக்கா விசனம்
ஹிலரி கிளிண்டன்
ஹிலரி கிளிண்டன்
முன்னதாக விக்கிலீக்ஸ் பதிவுகளை வெளியிடுவது தவறு என்று கூறியிருந்த அமெரிக்க ராஜாங்கத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன், இந்த தகவலால் பலருக்கு உயிராபத்து ஏற்படும் என கூறியிருந்தார்.

ஆனால் மிகவும் தணிக்கை செய்து வெளியிடப்பட்டுள்ள இந்த ஆவணத்தால் எந்த ஒரு ஆபத்தும் வரப்போவதில்லை என தெரிவித்துள்ள விக்கிலீக்ஸ், இந்த ஆவணங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலை கொண்டு சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க போவதாகவும் கூறியுள்ளது. 

வெளியிடப்பட்டுள்ள பதிவுகளில் ஒன்றில், டலஃபார் நகரத்தில் இராக்கிய இராணுவத்தினர் நபர் ஒருவரை கொன்றது தொடர்பான காட்சிநாடா அமெரிக்க இராணுவத்தினரிடம் கொடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுப்பட்டவர்களில் ஒருவரின் பெயர் கூட அமெரிக்க இராணுவத்தினரிடம் கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. 

மற்றுமொரு சம்பவத்தில் நபர் ஒருவரின் விரல்களை வெட்டி எடுத்த இராணுவத்தினர், அந்த நபரை பின்னர் அமிலத்தில் வீசி கொன்றுள்ளனர்.
இது போல இன்னும் ஏராளமான சித்ரவதை தொடர்பான பதிவுகள் வெளியாகியுள்ளன.

அதேபோன்று, அமெரிக்க படைகளால் வெளியில் இதற்கு முன்னர் சொல்லப்படாத ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவங்களும் இந்த பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

அணு இழப்பீடு சட்டம்: அமெரிக்கா அஞ்சுவது ஏன்?

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வருவதற்கு முன்னர், இந்தியாவின் நாடாளுமன்றம் நிறைவேற்றிய அணு விபத்து இழப்பீடு சட்டத்தில் தங்களுக்கு வசதியான மாற்றத்தைச் செய்துவிட வேண்டும் என்ற உறுதியுடன் இந்தியா வந்த அமெரிக்கக் குழு, அது அவ்வளவு சாதாரணமாக நடந்துவிடாது என்பதை அறிந்து ஏமாற்றமடைந்துள்ளது.

இந்தியாவின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையடுத்து ‘உரிய’ மாற்றங்களுக்குப் பின்னரே அணு விபத்து இழப்பீடு சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டது. பல நாட்கள் நடந்த தீவிரமான விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்ட்ட ஒரு சட்டத்தை, இந்திய அரசுடன் ஒரு ‘இணக்கமான பேச்சுவார்த்த’யின் மூலமதங்களுக்கு வசதியாக மாற்றிக் கொள்ளலாம் என்று நினைத்துவந்த அந்நாட்டின் அயலுறவு அமைச்சகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான கூடுதல் செயலர் வில்லியம் ஜே.பர்னஸ் தலைமையிலான குழு, அது நிறைவேறாது என்பதைப் புரிந்துகொண்டு, இந்தியா நிறைவேற்றியுள்ள அணு விபத்திற்கான கூடுதல் இழப்பு தொடர்பான பன்னாட்டு பிரகடனத்திற்கு உடன்பாடற்றது என்று கூறியுள்ளது.

பன்னாட்டு அணு சக்தி முகமையால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய அணு விபத்து தொடர்பான கூடுதல் இழப்பீடு பிரகடனம், அந்த பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ள நாடு ஒன்றில் அணு விபத்து ஏற்பட்டால், அதனால் பாதிக்கப்படும் அனைவருக்கும் கூடுதல் இழப்பீடு (அந்த நாட்டின் சட்டத்திற்குட்பட்டு அளிக்கப்படும் இழப்பீட்டையும் தாண்டி) அளிக்க இந்தப் பிரகடனம் வழி செய்கிறது. இதில் கையெழுத்திடத் தயார் என்று இந்தியா உறுதியளித்துள்ளது. அதில் இப்போதும் சிக்கல் ஏதுமில்லை என்று இந்திய அரசு கூறுகிறது.

ஆனால் சிக்கல் எங்கிருக்கிறது என்றால், அணு விபத்து ஏற்பட்டால் அந்த அணு உலையை விற்ற நிறுவனம் இழப்பீட்டிப் பொறுப்பிற்கு உடபடுத்தும் இந்திய அணு விபத்து இழப்பீடு சட்டத்தின் 17(பி) பிரிவே. இந்தப் பிரிவை நீக்க வேண்டும் என்று அமெரிக்கா வற்புறுத்துகிறது. அதாவது அணு விபத்து இழப்பீட்டில் அமெரிக்க நிறுவனங்களை பொறுப்பாக்காதே என்கிறது!

அதனால்தான் அணு விபத்து இழப்பீடு வழங்குவதற்கு பன்னாட்டு கூடுதல் இழப்பீடு பிரகடனத்தைப் பற்றிப் பேசுகிறது. அது கூடுதல் இழப்பீடு தொடர்பானது மட்டுமே, அணு விபத்து ஏற்பட்டால், அந்த அணு உலையை தயாரித்து விற்ற நிறுவனத்தின் பொறுப்பென்ன? அதுதான் இந்திய அரசு கேட்கும் கேள்வி. அந்தப் பொறுப்பில் இருந்து தயாரிப்பாளர் என்ற முறையில் அணு உலையை விற்ற நிறுவனம் தனது இழப்பீடு பொறுப்பை தட்டிக் கழித்துவிட்டு வெளியேறிவிட முடியாது. இதுதான் அமெரிக்காவிற்கு, அதாவது அதன் அணு உலை தயாரிப்பு நிறுவனங்களுக்கு கசக்கிறது.

அமெரிக்காவின் முன்னணி அணு உலை தயாரிப்பு நிறுவனங்களான வெஸ்டிங்ஹவுஸ், ஜெனரல் எலக்டிரிக் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே இது தொடர்பாக பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் பேசியுள்ளன. அப்போது, அணு விபத்து நடந்தால் அதில் தங்களுக்கு எந்த இழப்பீடு பொறுப்பும் இருக்கக் கூடாது என்றும், அதற்கான பாதுகாப்பு (Insulation from Damage Claim) வேண்டும் என்றும் கோரியதாக செய்திகள் கூறுகின்றன.

இஸ்லாமிய வங்கி முறையை இந்தியாவில் செயல்படுத்த பிரதமர் ஆவல்

இஸ்லாமிய வங்கி முறையை இந்தியாவில் செயல்படுத்த பிரதமர் ஆவல்

மலேஷியாவில் நெடுங்காலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இஸ்லாமிய வங்கி முறைக் குறித்து ஆய்வு செய்து, அதனை இந்தியாவில் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தி பார்க்கும்படியும், அதனை அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முனைய வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

வட்டியில்லா வங்கி முறையான இஸ்லாமிய வங்கியை இந்தியாவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கிக்கு பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மலேஷியாவில் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் நேற்று அந்நாட்டு பிரதமர் முஹம்மது நஜிப் துன் அப்துல் ரஜாக்கை சந்தித்து, பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல் குறித்து விரிவாகப் பேசினார். இந்த பேச்சு வார்த்தையின் பயனாக, இரு நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்துக் கொள்ள முடிவானது. இந்த ஒப்பந்தம் 2011 ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி கையெழுத்தாகிறது.

மலேஷியாவில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய வங்கி முறை குறித்து அறிய இந்தியா விரும்புகிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில், மலேஷிய அரசு நடத்தி வரும் இஸ்லாமிய வங்கி செயல்படும் முறையைப் போன்று, இந்தியாவிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கூறி வருகின்றனர். இதுபற்றி ஆராயுமாறு மத்திய ரிசர்வ் வங்கியை கேட்டுக் கொண்டுள்ளேன். மிகப் பிரமாண்ட முறையிலான இந்த வங்கியின் செயல்பாடு என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. மலேஷியாவில் வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்வதையும் வரவேற்கிறேன் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.

'எந்திரன் கதை என்னுடையது': தமிழ் எழுத்தாளர் போலீசில் புகார்



சென்னை, அக்.26: 1996-ம் ஆண்டு தான் எழுதிய சிறுகதையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைக்கதையை உருவாக்கியுள்ளனர் என எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் சென்னை போலீசில் புகார் செய்துள்ளார்.

ஆரூர் தமிழ்நாடன் என்கிற அமுதா தமிழ்நாடன் தனது வழக்கறிஞர்களுடன் வந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இதுதொடர்பாக புகார் செய்தார்.

1996-ல் ஜூஹிபா என்ற பெயரில் தான் எழுதிய சிறுகதை ஒரு இதழில் வெளியானது. அந்த சிறுகதையில் இருந்து எந்திரன் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடன் அதில் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்ததாக தமிழ்நாடன் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

காஷ்மீர் குறித்த கருத்தை கூறிய அருந்ததி ராய் மீதும் தேச ‌விரோத வழக்கு‌க்கு அனுமதி


காஷ்மீர் குறித்து தெரிவித்த கருத்தை எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததிராய் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக எப்போதும் இருந்ததில்லை. இது வரலாற்று உண்மை. இந்திய அரசுக்கும் இது தெரியும் என கருத்தரங்கு ஒன்றில் அருந்ததிராய் பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தியாவின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததிராய், இதுபோன்று பொறுப்பற்ற வகையில் கருத்து தெரிவிப்பது உண்மையில் எதிர்பாராதது என அகில இந்திய காங்கிரஸ் க‌ட்‌சி உறுப்பினர் சத்ய பிரகாஷ் மாலவியா தெரிவித்தார்.

அவரது கருத்து இந்தியாவையும், சர்வதேச சமூகத்தையும் தவறாக வழிநடத்தும் என்பதால் வரலாற்று உண்மைகளுக்கு மாறான அக்கருத்தை திரும்பப் பெற வேண்டும் என சத்ய பிரகாஷ் வலியுறுத்தினார்.


இதை பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கடுமையாகக் கண்டித்தன. தேச விரோதமாகப் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க மூத்த தலைவர் அருண் ஜேட்லி வலியுறுத்தினார்.

இதையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் எந்தச் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்வது என்பது குறித்து டெல்லி காவ‌ல்துறை‌யின‌ர் ஆலோசித்து வருகின்றனர்.

பிரிட்டிஷ் முன்னால் பிரதமர் டோனி ப்ளேய்ரின் மனைவியின் சகோதரி இஸ்லாத்தை தழுவினார்!

பலஸ்தீன விடுதலைக்கு குரல் கொடுக்கும்  மேற்கு உலக பெண்களில் மிகவும் பிரபல்யமானவர்களின் ஒருவரான Lauren Booth இஸ்லாத்தை ஏற்றுகொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

இவர் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமரான டோனி பிளயர் மனைவியின் சகோதரியாவார், இவர்  பலஸ்தீன் காஸா மீதான இஸ்ரேல்  ஆக்கிரமிப்பு முற்றுகைக்கு எதிராக  பலமாக குரல் கொடுத்து வருபவர் என்பது குறிபிடத்தக்கது  லண்டனில் நடைபெற்றுள்ள நிகழ்வொன்றில் கலந்து கொண்டு தான் ஒரு முஸ்லிம் என்று தெரிவித்துள்ளார் இவரின் அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்க ஆக்கிரமிப்பு போர் குறித்த 391,832 இரகசிய ஆவணங்கள்

ஈராக் மீது  அமெரிக்க ஆக்கிரமிப்பு போர் குறித்த 391,832    ஆவணங்களை  விக்கிலீக்ஸ் இணையதளம் நேற்று வெளிட்டுள்ளது இதில் 2004 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் வரையான காலத்தில் அமெரிக்கா உலகிற்கு மறைத்துள்ள ரகசியங்கள் கொண்டது எனினும் 2004ஆம் ஆண்டு மே மாதம் மற்றும் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாத சம்பவங்கள் உள்ளடக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது    (except for the months of May 2004 and March 2009)


விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள இரகசிய ஆவணங்களில் பிரகாரம் 2004 தொடக்கம் 2009 ஆண்டு வரையுள்ள 6 ஆண்டுகளில் ஈராக்கில் 109,032 பேர் கொல்லப்பட்டுள்ளனர் இவர்களின் 60 வீதமானவர்கள் பொது மக்கள் என்று விக்கிலீக் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு உதவும் ஈராக் பொம்மை நிர்வாகத்தின் படைகள் அமெரிக்க சித்திரவதை களுக்கு மேலதிகமாக மிக மோசமான சித்திரவதைகளை ஈராக் மக்கள் மீது மேற்கொண்டு  வருகின்றமையும் அந்த சித்திரவதை எதையும் அமெரிக்க படைகள் கண்டு கொள்வதில்லை என்பதையும் விக்கிலீக் இரகசிய ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன
இந்த இரகசிய ஆவணத்தில் அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகள் மேற்கொண்ட 271171 தாக்குதல்கள், 104272 போராளிகளின் தாக்குதல்கள், 128693 குண்டு வெடிப்புகள்  ,1328 தமக்கு தாமே தாக்கி கொண்டமை Friendfly Fire பற்றிய தகவல்கள் அடங்களாக பல தலைப்புகளில் தகவல்களை  விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது, அமெரிக்க வரலாற்றில் வெளியான மிகப் பெரிய இரகசியமாக இது கருதப்படுகின்றது நேரடியாக இவற்றை பார்வையிட இங்கு கிளிக் செய்யவும்

Copyright © 2009 News and Entertainment All rights reserved.